Skip to main content

கரும்பலகைக் கதைகள் புத்தகத்திற்கு மு.பா அவர்களின் பாராட்டுரை


       அன்பு நண்பர் பொறியாளர் புதுச்சேரி் அன்பழகன் அவர்களின் கரும்பலகைக் கதைகள் சிறுவர்களுக்கான நூல் படித்தேன்.
       மருத்துவராகவோ பொறியாளராகவோ வந்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு குழந்தைகளை கொடுமைப் படுத்தும் இந்த காலத்தில் அறிவை எவ்வாறு விளையாட்டாகப் பெறலாம் என்பதையும் அறிவியலை எப்படி ஆர்வத்தோடு எளிமையாக உரையாடல் மூலம் கற்கலாம் என்பதையும் நேர்த்தியான ஆசிரியர் மாணவர் உரையாடல் மூலம் கதையாக சொல்லியிருக்கிறார் 
       அன்பழகன்.மாணவர்கள் மத்தியில் ஒரு வினாவை எழுப்பி அவர்களுக்குள் தேடலை ூண்டி விடைகளைப் பெறும் அற்புதமான முயற்சியை இவர் செய்திருக்கிறார் .உப்பிட்டவரை உள்ளளவும் நினை எனப் பழமொழி சொல்லும் அந்த உப்பின் தேவையை உப்பின் கதையை மிக நீண்ட தேடலின் மூலம் பிஞ்சு உள்ளங்களுக்கும் பெரியவர்களுக்கும் சொல்லியிருக்கிறார்.
      துவைத்த துணி எப்படி காய்கிறது என்பதை எளிய சோதனை மூலம் உணர வைத்திருக்கிறார்.
     உலகம் முழுதும் எண் 13 கண்டு பயப்படும் காரணங்களை வரலாற்று நிகழவுகளோடு விளக்குகிறார்.
    குழல்விளக்கு குமரேசன் மூலம் குழல் விளக்கு எரிய ஏன் நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதையும் விளக்குவது சிறப்பு 
    உலகத்தை படைத்தது யாரு என்ற கதையில் கடவுள் ,தானே உறுவானது என்ற பதில்களோடு ஒரு சிறுமி இயற்கை தன்னைத்தானே படைத்துக் கொள்கிறது என்று பதில் சொல்லும்போது குழந்தைகள் எவ்வளவு அறிவாற்றல் மிகுந்தவர்கள் என்பதை உணரமுடிகிறது.இந்த மெக்காலே கல்வி முறை எப்படி அவர்களை மழுங்கடிக்கிறது என்பதை உணரமுடிகிறது.
     அன்பழகன் நல்ல அறிவியல் கதை சொல்லியாக மிளிர்கிறார் .ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளுக்கு இந்த புத்தகத்தை படித்து காட்டவேண்டும்.அவர்களும் அன்றாட அறிவியலை நோக்கிய தேடலுக்கு ஆயத்தமாகி தேடித் தேடி அறிந்து அறிவை வளர்த்துக்கொள்வார்கள்.வேலுமாமாவும் அறிவியல் அறிஞர் .வி .வெங்கடேசுவரனும் சிறப்பான அணிந்துரையை வழங்கியிருக்கிறார்கள்.

     இன்றைய மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவருக்குமான நூல்.
மேலும் படைக்க வாழ்த்துகள் அன்பழகன்
    அன்புடன், மு.பா, புதுச்சேரி.


கரும்பலகைக் கதைகள்
புதுச்சேரி அன்பழகன்
வெளியீடு :பாரதி புத்தகாலயம்



Comments

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ்

  இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ் ---- புதுச்சேரி அன்பழகன்.          " டாக்டர் யெல்லபிரகட சுப்பாராவ்   என்ற இந்திய விஞ்ஞானி வாழ்ந்ததால் இன்று உலக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அவரைப்பற்றி நன்கு அறிந்த அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். மருத்துவ உலகிற்கு பல கண்டுபிடிப்புகளையும் பல முன்னெடுப்புகளையும் வழங்கிய அதிசய மனிதர் என்றும் அவர் போற்றப்படுகிறார்.. ஆனாலும் அவரைப்பற்றி   அதிகமாக நாம் கேள்விப்பட்டிருக்க   வாய்ப்பில்லை.         ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரம் என்ற ஊரில் ஒரு ஏழை தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் 1895-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள்   யெல்லபிரகட சுப்பாராவ்   பிறந்தார். தற்போதைய கோவிட்-19 தொற்று போல அன்றைக்கு பிளேக் என்ற தொற்று நோய் பரவியதால் இவரின் தந்தை காலமானார். தன் தந்தையின் இழப்பை சுப்பாராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார்.     தந்தையின் வருமானம் இல்லாமல் குடும்பம் தவித்...

ஒரு எளிய கேள்வி

து வைத்த துணிகளைக் காயவைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் என் மகள் என்னருகே ஓடி வந்தாள். கேள்வி கேட்பது அவள் சுவாபம். நான் தடை ஏதும் செய்வதில்லை.அதிலும் அவள் கேள்வி எப்படிப்பட்டதாக இருந்தாலும்,அது எனது சிந்தனையை தூண்டுவதாகவே இருந்துள்ளது. அவளது கேள்வியை உள்வாங்க நானும் ஆவலாக , ஒடிவந்த என் மகளை அப்படியே தூக்கிக்கொண்டேன். அப்பா! அப்பா! எனக்கு ஒரு சந்தேகம். என்னமா ,சொல்லு! சொல்லூ! என்றேன் ஆவலோடு. அப்பா! அப்பா! துணிகளெல்லாம் எப்படி அப்பா! காயுது? அத, நம்ம கண்ணால பார்க்க முடியலையே ஏனப்பா? என்றாள். “ஓ அதுவாமா, துணிகளெல்லம் சூரிய வெப்பத்தால காயுது.அதிலிருக்கிற ஈரமெல்லாம் காற்றுல காணாம போயிடுது. அதனால நம்மால பார்க்க முடிவதில்லை” என்றேன். அத நம்ம கண்ணால பார்க்க வேற வழி இல்லையாப்பா?என்று இன்னொரு கேள்வியை கேட்டுவிட்டாள். என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. சரி! சரி! அப்புறமா சொல்கிறேன்! என்று அவளை சமாளித்து அனுப்பி விட்டேன். என் மகளின் இந்த கேள்வி அறிவியல் ஆசிரியரான என்னை குடைந்து கொண்டேயிருந்தது. ஆவியாகி காற்றில் கலந்துவிடுகிற நீரை , கண் முன்னால் காட்டினால்தான் பிள்ளைகள் நம்முவார்...