Skip to main content

கரும்பலகைக் கதைகள் புத்தகத்திற்கு மு.பா அவர்களின் பாராட்டுரை


       அன்பு நண்பர் பொறியாளர் புதுச்சேரி் அன்பழகன் அவர்களின் கரும்பலகைக் கதைகள் சிறுவர்களுக்கான நூல் படித்தேன்.
       மருத்துவராகவோ பொறியாளராகவோ வந்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு குழந்தைகளை கொடுமைப் படுத்தும் இந்த காலத்தில் அறிவை எவ்வாறு விளையாட்டாகப் பெறலாம் என்பதையும் அறிவியலை எப்படி ஆர்வத்தோடு எளிமையாக உரையாடல் மூலம் கற்கலாம் என்பதையும் நேர்த்தியான ஆசிரியர் மாணவர் உரையாடல் மூலம் கதையாக சொல்லியிருக்கிறார் 
       அன்பழகன்.மாணவர்கள் மத்தியில் ஒரு வினாவை எழுப்பி அவர்களுக்குள் தேடலை ூண்டி விடைகளைப் பெறும் அற்புதமான முயற்சியை இவர் செய்திருக்கிறார் .உப்பிட்டவரை உள்ளளவும் நினை எனப் பழமொழி சொல்லும் அந்த உப்பின் தேவையை உப்பின் கதையை மிக நீண்ட தேடலின் மூலம் பிஞ்சு உள்ளங்களுக்கும் பெரியவர்களுக்கும் சொல்லியிருக்கிறார்.
      துவைத்த துணி எப்படி காய்கிறது என்பதை எளிய சோதனை மூலம் உணர வைத்திருக்கிறார்.
     உலகம் முழுதும் எண் 13 கண்டு பயப்படும் காரணங்களை வரலாற்று நிகழவுகளோடு விளக்குகிறார்.
    குழல்விளக்கு குமரேசன் மூலம் குழல் விளக்கு எரிய ஏன் நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதையும் விளக்குவது சிறப்பு 
    உலகத்தை படைத்தது யாரு என்ற கதையில் கடவுள் ,தானே உறுவானது என்ற பதில்களோடு ஒரு சிறுமி இயற்கை தன்னைத்தானே படைத்துக் கொள்கிறது என்று பதில் சொல்லும்போது குழந்தைகள் எவ்வளவு அறிவாற்றல் மிகுந்தவர்கள் என்பதை உணரமுடிகிறது.இந்த மெக்காலே கல்வி முறை எப்படி அவர்களை மழுங்கடிக்கிறது என்பதை உணரமுடிகிறது.
     அன்பழகன் நல்ல அறிவியல் கதை சொல்லியாக மிளிர்கிறார் .ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளுக்கு இந்த புத்தகத்தை படித்து காட்டவேண்டும்.அவர்களும் அன்றாட அறிவியலை நோக்கிய தேடலுக்கு ஆயத்தமாகி தேடித் தேடி அறிந்து அறிவை வளர்த்துக்கொள்வார்கள்.வேலுமாமாவும் அறிவியல் அறிஞர் .வி .வெங்கடேசுவரனும் சிறப்பான அணிந்துரையை வழங்கியிருக்கிறார்கள்.

     இன்றைய மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவருக்குமான நூல்.
மேலும் படைக்க வாழ்த்துகள் அன்பழகன்
    அன்புடன், மு.பா, புதுச்சேரி.


கரும்பலகைக் கதைகள்
புதுச்சேரி அன்பழகன்
வெளியீடு :பாரதி புத்தகாலயம்



Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது....

மாணவர்கள் கொண்டாடிய சுதந்திர தினவிழா

சு தந்திரதின விழாவில் கொடியேற்றி துவக்கி வைப்பதற்காக, மாணவர் நல சங்கம் சார்பில் என்னை அழைத்திருந்தார்கள். முப்பதாண்டுகாலமாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவன் என்ற தகுதி ஒரு காரணமாக இருக்கலாம். மிக முக்கியமான இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக என்னை தயார் செய்துகொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்படும் ஓசைகேட்டு திறந்தேன். கையில் தேசியக்கொடியோடு மாணவர்கள் சீருடையில் வந்திருந்தனர். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. வாங்க! வாங்க! என்று பரவசத்தோடு உள்ளே அழைத்தேன். அனைவரும் ஒரே குரலில் “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! கொண்டாடுவோம்! என்றபடியே ஒரு வண்ண காகிதத்தை கையில் கொடுத்துவிட்டு அடுத்த வீட்டிற்கு சென்றுவிட்டனர். சுதந்திரமே மாணவர் உருவில் வீட்டு வந்தது போல இருந்தது. அவர்கள் கொடுத்துச்சென்ற காகிதத்தின் இரு பக்கத்திலும் பதினைந்து என்று எண்ணால் எழுதப்பட்டிருந்தது. மெல்ல பிரித்து பார்க்க அது எட்டாக மடிக்கப்பட்டிருந்தது. இது சுதந்திரதினத்தை குறிக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. காகிதத்தின் உள்ளே “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! வறுமையற்ற வளமான ஓர் இந்தியாவை உருவாக்குவோம்! ” எ...