அன்பு நண்பர் பொறியாளர் புதுச்சேரி் அன்பழகன் அவர்களின் கரும்பலகைக் கதைகள் சிறுவர்களுக்கான நூல் படித்தேன்.
மருத்துவராகவோ பொறியாளராகவோ வந்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு குழந்தைகளை கொடுமைப் படுத்தும் இந்த காலத்தில் அறிவை எவ்வாறு விளையாட்டாகப் பெறலாம் என்பதையும் அறிவியலை எப்படி ஆர்வத்தோடு எளிமையாக உரையாடல் மூலம் கற்கலாம் என்பதையும் நேர்த்தியான ஆசிரியர் மாணவர் உரையாடல் மூலம் கதையாக சொல்லியிருக்கிறார்
அன்பழகன்.மாணவர்கள் மத்தியில் ஒரு வினாவை எழுப்பி அவர்களுக்குள் தேடலை தூண்டி விடைகளைப் பெறும் அற்புதமான முயற்சியை இவர் செய்திருக்கிறார் .உப்பிட்டவரை உள்ளளவும் நினை எனப் பழமொழி சொல்லும் அந்த உப்பின் தேவையை உப்பின் கதையை மிக நீண்ட தேடலின் மூலம் பிஞ்சு உள்ளங்களுக்கும் பெரியவர்களுக்கும் சொல்லியிருக்கிறார்.
துவைத்த துணி எப்படி காய்கிறது என்பதை எளிய சோதனை மூலம் உணர வைத்திருக்கிறார்.
உலகம் முழுதும் எண் 13 ஐ கண்டு பயப்படும் காரணங்களை வரலாற்று நிகழவுகளோடு விளக்குகிறார்.
குழல்விளக்கு குமரேசன் மூலம் குழல் விளக்கு எரிய ஏன் நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதையும் விளக்குவது சிறப்பு
உலகத்தை படைத்தது யாரு என்ற கதையில் கடவுள் ,தானே உறுவானது என்ற பதில்களோடு ஒரு சிறுமி இயற்கை தன்னைத்தானே படைத்துக் கொள்கிறது என்று பதில் சொல்லும்போது குழந்தைகள் எவ்வளவு அறிவாற்றல் மிகுந்தவர்கள் என்பதை உணரமுடிகிறது.இந்த மெக்காலே கல்வி முறை எப்படி அவர்களை மழுங்கடிக்கிறது என்பதை உணரமுடிகிறது.
அன்பழகன் நல்ல அறிவியல் கதை சொல்லியாக மிளிர்கிறார் .ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளுக்கு இந்த புத்தகத்தை படித்து காட்டவேண்டும்.அவர்களும் அன்றாட அறிவியலை நோக்கிய தேடலுக்கு ஆயத்தமாகி தேடித் தேடி அறிந்து அறிவை வளர்த்துக்கொள்வார்கள்.வேலுமாமாவும் அறிவியல் அறிஞர் த.வி .வெங்கடேசுவரனும் சிறப்பான அணிந்துரையை வழங்கியிருக்கிறார்கள்.
இன்றைய மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவருக்குமான நூல்.
மேலும் படைக்க வாழ்த்துகள் அன்பழகன்
அன்புடன், மு.பா, புதுச்சேரி.
மேலும் படைக்க வாழ்த்துகள் அன்பழகன்
அன்புடன், மு.பா, புதுச்சேரி.
கரும்பலகைக் கதைகள்
புதுச்சேரி அன்பழகன்
வெளியீடு :பாரதி புத்தகாலயம்
புதுச்சேரி அன்பழகன்
வெளியீடு :பாரதி புத்தகாலயம்
Comments
Post a Comment