Skip to main content

Posts

Showing posts from August, 2020

தத்துவம் என்பது......?

    தத்துவம் என்பது......      நகைச்சுவை துணுக்கா..   வாழ்வின் தெறிப்பா... எது தத்துவம்?                                                அ ன்று    வீட்டுப்பாட நோட்டுகளை ஆசிரியர் திருத்திக்கொண்டிருந்தார். எல்லோரும் ஒரே பதிலை எழுதி இருந்தாலும் கையெழுத்துகளின் அசைவுகளில் அவர் மனம் சென்றது. சில மாணவ மாணவியர்களின் கையெழுத்தைப் பார்க்கும் போது   மிகவும்   விரும்பி ரசித்தார். அச்சு பிரதிகளைப் பார்க்கும் போது அவருக்கு   தோன்றுவதில்லை. அந்த நினைப்பில் அழ்ந்தபடியே அடுத்த நோட்டை எடுத்தார் ஆசிரியர். அது நமது பள்ளிக்கூட நோட்டுப்போல இல்லை. எந்த மாணவனோ இந்த நோட்டை   அவசரத்தில் மாற்றி வைத்திருக்க வேண்டும். சரி இந்த மாணவனின் கையெழுத்து எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்று நோட்டை திருப்பினார். கையெழுத்து அவரை ஈர்க்கவில்லை. ஆனால் ஜே .கே தத்துவங்கள் என்று ஒரு பக்கத்தில் எழுதி இருந்தது. அவருக்கு     இது ஆச்சரியமாக இருந்தது. அதுவும் தத்துவமா! என்று ஆவலோடு படிக்க ஆரம்பித்தார் ஆசிரியர். அதில் ஜே .கே என்ற ஆசிரியர் பாடம் நடத்தும் போது திரும்ப திரும்ப

தாத்தவும் பேத்தியும்………. வெறும் ஸ்கூட்டர் பயணமல்ல! எதிர்கால வாழ்வின் பயணம்! தொடரட்டும்!

  தாத்தவும் பேத்தியும்……….                                                              வெறும் ஸ்கூட்டர் பயணமல்ல!   எதிர்கால வாழ்வின் பயணம்! தொடரட்டும்! “தா த்தவும் பேத்தியும்”  என்ற குருநாவலை  வாசித்தேன். மகிழ்ந்து வாசித்துகொண்டே வந்த நம்மீது,  நம்சமூகத்தின் மீது ஒரு சாட்டையடி  வந்து விழுகிறது. இந்த சூழல் எப்பொழுது மாறும் என்று  ஏங்க வைத்து விடுகிறார். சரி கதைக்கு வருவோம்! பேத்தியை பள்ளிக்கு அழைத்துச் செல்வதும் வருவதும் அவருக்கும் விருப்பமான செயலாகிவிடுகிறது. பேத்தியின்   மழலைச் சொற்களுக்காக மட்டுமல்ல அவள் எழுப்புகிற் விந்தையான கேள்விகளுக்கு அவராமல் பதில் சொல்லமுடியாமல் திணருகிறார். அவள் எழுப்பும் கேள்விகளை அவர் ஒருபொழுதும் தடுப்பதில்லை. அவர் மிகவும் விரும்பி ரசித்து கேட்பது அவருக்கும சுகமாக இருக்கிறது. மொட்டு மலர்வது பொல புதுப்புது சிந்தனைகள் அரும்புவதில் வியந்து போகிறார். இத்தனை சிந்தனைகளா! இந்த குழந்தைகள் வாழ்வின் அற்புதங்கள் என்று ஒவ்வொரு நாளும் வியந்து போகிறார். அப்படிபட்ட தன் பேத்தி ரேங்கில் சற்று குறைந்து விட்டால் என்பற்காக போ ! வெளியில போய் நில்லு! என்று அவளின் தாய் சொல்