Skip to main content

குழந்தைகளுக்கான புத்தகம்


கரும்பலகைக்கதைகள்புதுச்சேரி அன்பழகன்
 

குழந்தைகளுக்கான புத்தகம்

        புதுச்சேரி அன்பழகன் ஒரு பொறியாளர். குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி ஓர் ஆசிரியராக ஆச்சரியப்படுத்துகிறார். 

இந்தப் புத்தகத்தில் மொத்தம் பதினேழு குட்டிக்கதைகள் உள்ளன. மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள்தான் கதையின் நாயகர்கள். 

      தொண்ணூற்றி ஒன்பது றுபத்தியாறு என நாம் திரும்பத் திரும்பச் சொன்னால் நமது நுரையீரல் நலமடைகிறது என்பது முதல் பதிமூன்று எனும் எண் மதவாதிகளால் ஆபத்தானதாகியது, பூச்சியத்தின் ஆற்றல் என விரிந்து ராபர்ட்ஸ்காட், அமுன்சென் என அறிவியல் பிறவிகளும் எடுக்கின்றன இவரது குடிக்கதைகள்.

    உப்பு பற்றிய உரையாடலை நான் மிகவும் ரசித்தேன். மாணவர்கள் கொண்டாடிய சுதந்திர தினமும் மனதைக் கவர்ந்தது. 
  மதிப்பெண் போட்டியில் மழலைகளின் உள்ளத்து அழுகுரல் ஏன் கேட்பதில்லை என வினவும் அந்த பள்ளியைத் தொலைத்துவிட்டேன் கதை என மிகச்சிறப்பான கதைகளை குழந்தைகளுக்காய் தந்திருக்கிறார். 

   அவரை வரவேற்றுப் போற்றுவோம். 

இந்த புத்தகத்தை வாங்கி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அன்பளிப்பாக வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். --         
         -- புத்தகம் பேசுது இதழில்(அக்டோபர்-2018) ஆயிஷா நடராஜன்வெளியீடு: பாரதி புத்தகாலயம் எண்.7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,சென்னை.600018. தொலைபேசி:044-24332424, 9444960935



Comments

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ்

  இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ் ---- புதுச்சேரி அன்பழகன்.          " டாக்டர் யெல்லபிரகட சுப்பாராவ்   என்ற இந்திய விஞ்ஞானி வாழ்ந்ததால் இன்று உலக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அவரைப்பற்றி நன்கு அறிந்த அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். மருத்துவ உலகிற்கு பல கண்டுபிடிப்புகளையும் பல முன்னெடுப்புகளையும் வழங்கிய அதிசய மனிதர் என்றும் அவர் போற்றப்படுகிறார்.. ஆனாலும் அவரைப்பற்றி   அதிகமாக நாம் கேள்விப்பட்டிருக்க   வாய்ப்பில்லை.         ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரம் என்ற ஊரில் ஒரு ஏழை தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் 1895-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள்   யெல்லபிரகட சுப்பாராவ்   பிறந்தார். தற்போதைய கோவிட்-19 தொற்று போல அன்றைக்கு பிளேக் என்ற தொற்று நோய் பரவியதால் இவரின் தந்தை காலமானார். தன் தந்தையின் இழப்பை சுப்பாராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார்.     தந்தையின் வருமானம் இல்லாமல் குடும்பம் தவித்...

உலகத்தைப் படைத்தது யாரு?

நா ளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள். அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள். “சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! அழகாக படைத்தது யாரு! அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடிகிட்டு அழகாக படைத்தது ...