Skip to main content

Posts

Showing posts from March, 2018

வாழைப்பழக் கனவு

அ ன்று நிறைய வாழைப்பழங்கள் வாங்கி வந்திருந்தார் அப்பா . அதில் ஒரு வாழைப்பழத்தை எடுத்து உண்ண ஆரம்பித்தேன் . அதற்குள் எனது   அம்மா வந்துவிட்டார் . வாழைப்பழங்களைப் பார்த்தயுடன் , “ அய்யோ இந்த வாழைப்பழங்கள் நன்றாக பழுத்திருக்கிறதே!   நாளைக்கு வைத்தால் அழுகிவிடும்”    எனக்கூறி , வாழைப்பழங்களை சிறிது சிறிதாக நறுக்க சொன்னாள் . உடனே நான் வாழைப்பழத்தை எடுத்து   நறுக்க ஆரம்பித்தேன் . அப்போதுதான் நான் கவனித்தேன் , வாழைப்பழத்தின் நடுவில் கரும்புள்ளிகள்   இருப்பதை . ஏன் நடுவில் கரும்புள்ளிகள் இருக்கின்றன   என அம்மாவிடம் கேட்டேன்   . மூன்றாம் வகுப்பு படிக்கின்ற உனக்கு இந்த ஆராட்சியெல்லாம் எதுக்கு ? என கேட்டபடியே , நறுக்கிய வாழைப்பழ துண்டுகளின் தோலை நீக்கி பிசைய சொன்னாள் . பின்னர் வெல்லமும் தேங்காய் துருவலும் போட்டு நன்றாக குழையும்படி கிண்டினாள் . அப்புறம்   காய்ந்த திராட்சை , கல்கண்டுகளை மேலும் போட்டு கலந்து உண்ணும்படி சொன்னாள் . இது பஞ்சமிருதம் போல இருக்கே   என்று சொல்லி சாப்பிட்டேன் . நெஞ்சிவரை இனித்தது . மறுநாள் எனத

உயிரின் அடுக்கு

            உயிரின் அடுக்கு மலைகளை   பாராய்!    மலைகளை   பாராய்! மவுனமாய்   அமர்ந்திருக்கும்   மலைகளை   பாராய்! மேடு   பள்ளங்களைக்   காட்டி   நிற்கும் காட்டையே   தன்மேல்   வளர்த்திருக்கும்! நீளமாய்    உயரமாய்   வளர்ந்திருக்கும் வளமான   சுனைநீரை   வைத்திருக்கும்! வளைந்து   நெளிந்து   சுற்றி வரும் வகைவகையாய்   உயிர்களை வளர்த்து வரும்! புவிமேல்   ஓவியமாய்   படர்ந்திருக்கும் பறவைகள்   வாழ்ந்திடவே   இடம்   கொடுக்கும்! மலைகள்   வெறுமனே   பாறைகள்   அல்ல பல்லுயிர்   குடும்பத்தின்   அடுக்கு   வீடாகும்!