Skip to main content

உலகத்தைப் படைத்தது யாரு?

நாளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள்.

அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள்.

“சின்னச் சின்ன சிட்டுக்குருவியே!

சின்னச் சின்ன சிட்டுக்குருவியே!

அழகாக படைத்தது யாரு!

அங்கும் இங்கும் பறந்துகிட்டு

ஆனந்தமா பாடிகிட்டு

அழகாக படைத்தது யாரு!

உன்னை படைத்த ஆண்டவர்

என்னை படைக்க மாட்டாறா?

உலகத்தைப் படைத்தது யாரு?

பிள்ளைகளோடு சேர்ந்து நானும் பாடினேன். பிள்ளைகள் கூடி இப்படி பாடுவது குழந்தைகளுக்கும் இன்பம், அதை பார்க்கிற நமக்கும் இன்பம் கூடிவிடுகிறது. பிள்ளைகள் இப்படி உறவுகளை வளர்த்துகொண்டு கூடி வாழவே விரும்புகின்றன என்பதுவும் என் சிந்தனையில் வந்து போனது. இருந்தாலும் , இந்த பாட்டிலும் எனக்கு தேவையான ஒரு வரி இருப்பதை பார்த்து வியந்து போனேன். பிள்ளைகள் பாட்டை நிறுத்தியதும், இந்த உலகத்தை படைத்தது யாரு? என்ற கேள்வியைக் கேட்டேன். கடவுள் தான் இந்த உலகத்தை படைத்தார் என உடனே பதில் வந்தது. உங்களுக்கு இப்படி யார் சொல்லிக்கொடுத்தது? என்றேன். எங்க வீட்டுலதான் சொல்லிக்கொடுத்தாங்க என்றனர் பிள்ளைகள். ஆனா எங்க வீட்டுல அப்படி சொல்லமாட்டோம்! என்றேன். வேற எப்படி சொல்லுவிங்க?என ஒரு மாணவி கேட்டாள். இந்த உலகம் இயற்கையானது என்றேன். உடனே ஒரு மாணவன், ஆமாம்! ஆமாம்! எங்கள் அறிவியல் ஆசிரியரும் சொன்னாங்க என்றான் மகிழ்வோடு. அப்படியின்னா இந்த இயற்கையை படைத்தது யாரு! நீங்களா? என ஒரு மாணவி பட்டென கேட்டாள்.எனக்கு பக்கென்றிருந்தது. உடனே என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இதுவரை மவுனமாக இருந்த ஒரு மாணவி , இயற்கையை யாரும் படைக்கத் தேவையில்லை! அது தன்னைத் தானே படைத்துக்கொண்டதென , வேகமாக பதில் சொல்ல அனைவரும் அமைதியானார்கள். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. பின்னர் கிழேயிருந்து ஒரு மாணவன் விளையாட அழைக்க அனைவரும் ஓடிவிட்டனர்.

எனக்கோ நாளை பாடம் நடத்த துவக்கப் புள்ளி கிடைத்துவிட்டதைப் போலிருந்தது. “ இயற்கை தன்னைத் தானே படைத்துக்கொண்டது” என்ற வார்த்தை என்னுள் அப்படியே பதிந்துவிட்டது. எப்படி அந்த மாணவி இப்படி சிந்தித்தாள் என தெரியவில்லை. ஒரு பேச்சுக்கு எதிர் பேச்சாக பட்டென வார்த்தைகள் வந்து விழுந்திருக்கலாம் . இருந்தாலும் என் சிந்தனைக்கு விருந்தாக அமைந்து விட்டது. பெரிய பெரிய அறிவியல் புத்தகங்களில் எல்லாம், இந்த இயற்கை என்றென்றும் இருந்துவந்துள்ளது! யாராலும் படைக்கமுடியாதது என்றுதான் எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் அதைவிட “ இயற்கை தன்னைத் தானே படைத்துக்கொண்டது” என்ற வார்த்தை எளிமையாகவும் அர்த்தம் மாறாமளும் உள்ளாதாக எனக்கு பட்டது.

உலகம் யாராலும் படைக்கப்பட்டதல்ல ! அது தானே பல மாற்றங்களுக்கு உள்ளாகி ஒப்பில்லாத உயர்ந்த அழகோடு வளர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மேலும் அது பல அழிவுகளை சந்தித்தாலும் வளர்ச்சியை நோக்கிய பயணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. பூமியை ஆளத் தகுதிபடைத்த மிக உயர்ந்த மூளையைக் கொண்ட மனிதனையே அது படைத்துவிட்டது. நினைத்து பார்க்க வியப்பாக இருக்கிறது. மனிதன் வாழவேண்டுமென்றால் இயற்கையை பாதுகாக்க வேண்டுமென்ற முன் நிபந்தனையையும் வைத்துவிட்டது, எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.

இப்படி என் சிந்தனை வளர்ந்துகொண்டே போனது. நாளை நான் எடுக்கப் போகும் வகுப்பு மிகவும் பயனுள்ளதாகவும் சுவராசியமானதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை தானே!.

Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. புதுச்சேரி அன்பழகன்August 23, 2010 at 1:19 AM

    மதிப்புமிக்க எழுத்தாளர் காஷ்யபன் , எஸ்.வி ஆகியோருக்கு நன்றி . எனது எளிய படைப்புகள் உங்கள் மனம் தொட்டதால் இன்னும் மணம் வீசுகிறது . புதுவை பிரபாவுக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை

மாணவர்கள் கொண்டாடிய அறிவியல் விழா!

             காலை இறைவணக்கத்தை முறைப்படி செலுத்துவதற்காக மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் வரிசையாக நிற்கத் தொடங்கினார்கள். ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களை ஒழுங்கு படித்தியபடியே மேடைக்கு வந்தார்கள். சற்று நேரத்தில் பள்ளியின் முதல்வரும் மேடைக்கு அருகில் வரவும்,, மாணவர்களிடையே சப்தம் படிப்படியாக குறைந்து அமைதி நிலவியது. மாணவத் தலைவர் இறைவணக்கத்தை ஆரம்பித்து வைக்க, மாணவர்கள் ஒரே குரலில் பாடி முடித்தார்கள். சில முக்கியச் செய்திகள் மற்றும் அறிவிப்புகளோடு அன்றைய இறைவணக்க நிகழ்வு முடிவுக்கு வந்தது. மாணவர்கள் தத்தம் வகுப்பிற்குச் செல்லத் தொடங்கினார்கள். மைதானம் வெற்றிடமாக மாறியது. சிறிது நேரத்தில் மீண்டும் சில மாணவர்கள் மைதானத்தை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக ஓடினார்கள். பள்ளி முதல்வர் தொடங்கி ஆசிரியர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏன் சில மாணவர்கள் மட்டும் மீண்டும் ஏதோ அணிவகுப்பு நடத்த முயற்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை!. மீண்டும் மைதானத்தில் ஓடிய மாணவர்கள் ஏதோ ஒரு ஒழுங்கிற்கு வந்தது போல தெரிந்தது. குறுக்கும் நெடுக்குமாக ஒரு அட்

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது.