Skip to main content

தகரத்திற்கு ‘டின்’பிளேக்’ நோயா?

நான் வகுப்பறையை மிகவும் நேசிக்க தொடங்கிவிட்டேன். விரும்பி பாடம் நடத்துவதன் இன்பத்தை ஒவ்வொரு நாளும் சுவைக்க ஆரம்பித்துவிட்டேன்.அன்றும் அப்படித்தான்,பன்றிக்காய்ச்சல் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு; தனிமங்கள் குறித்த பாடத்தை நடத்த ஆரம்பித்தேன். மனித நாகரீக வளர்ச்சியில் தனிமங்களூக்கு மிகப்பெரிய பங்கிருக்கிறது என தொடங்கி ஒரு வழியாக அன்றைய பாடத்தை முடித்தேன். ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் என்றேன்.


ஒரு மாணவன் தயங்கியபடியே எழுந்தான். சார்! நீங்க சந்தேகம் வராம ஒழுங்கா பாடம் நடத்திருங்க, ஆனால் தற்போது நிறைய நோய்கள் பற்றி கேள்வி படுகிறோம். அது போல் தனிமங்களுக்கு நோய் வருமா சார்? என்று கேட்டான். உடனே எல்லோரும் சிரித்து விட்டனர்.


தனிமங்களுக்கு எப்படி நோய் வரும்? என்று ஆளாளுக்கு பேசிக்கொண்டனர். ஆனால் எனக்கு கோபம் வரவில்லை.இது குறும்புத்தனமான கேள்வியாக இருந்தாலும்,இதில் உண்மை இருப்பதாக எனக்கு பட்டது. உடனே ஒருவாறு சமாளித்து, இரும்புக்கு துரு பிடிப்பதை நீ பார்த்ததில்லையா? அதுவும் ஒரு நோய் போன்றதுதானே! என்று பதில்சொல்லி அமரவைத்தேன். என்றாலும், இந்த கேள்விக்கான சரியான பதிலை நான் சொன்னதாக என் மனம் ஒப்பவில்லை. கேள்விக்கான பதிலை தேடிக்கொண்டே இருந்தேன்.


ஒருநாள் மாலை நடைப் பயிற்சிக்காக கடற்கரை சென்றிருந்தேன்.அங்குதான் எடிசன் வாத்தியாரைச் சந்தித்தேன். அவர் ஒரு பேச்சாளர்.அவர் பேசும்போது ஏதாவது அறிவியல் கதைகளைப் பேசாமல் பேச்சை முடிக்கமாட்டார். இன்று அவரைச்சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இருவரும் நலம் விசாரித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். என் மாணவன் எழுப்பியக் கேள்வியை மெல்ல அவரிடம் கேட்டேன். அவர் சற்று நேரம் யோசித்தப்படியே ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.


ஒரு முறை நெப்போலியன் ரசிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். அவனுக்கு மாஸ்கோவை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் நீண்டகால ஆசை. திட்டமிட்ட படியே நெப்போலியனின் படைகள் மாஸ்கோவை நெருங்கிவிட்டன. அப்போது மாஸ்கோவில் கடும் குளிர்காலம் தொடங்கியிருந்தது.படை வீரர்கள் தங்களை கடும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள எராளமான குளிர் தாங்கும் உடைகளை இங்கிலாந்து நாட்டிலிருந்து வரவழைத்திருந்தனர். ஆனால் அவர்கள் அந்த உடைகளை அணிந்து கொண்டு பட்டனை தேடியபோது அவையெல்லாம் நொருங்கிப்போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சொல்லி வைத்தாற் போன்று எல்லா கோட்டுகளிலும் பட்டன்கள் நொருங்கிப்போயிருந்தன. இது யார் செய்த சதி? மந்திரமோ! மாயமோ! என்று படைவீரர்கள் புளம்ப தொடங்கினர். மேற்கொண்டு கடும் குளிரைத் தாண்டி சண்டை போட முடியாமல் படைவீரர்கள் சோர்ந்து போய் வீழ்ந்தனர். இதனால் நெப்போலியன் மாஸ்கோவை பிடிக்க முடியாமல் வெறுங்கையோடு நாடு திரும்பினார். ஒரு சில பட்டன்கள் ஒரு பெரும் போரையே நிறுத்திவிட்டது ஆச்சரியம்தான்.


ஏன் இந்த டின் தனிமத்தால் செய்த பட்டன்கள் அப்போது நொறுங்கிப்போனது என்று அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. இது இந்த தனிமத்திற்கு வந்த பிளேக் நோய் என்றே அழைத்தார்கள். இந்த கதையை எடிசன் சார் சொன்ன போது நம்ப முடியாததாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இந்த கதையை வரலாற்று புத்த்கத்தில் படித்ததாக உறுதியாக கூறினார். இந்த டின் பிளேக் பற்றி எடிசன் சாருக்கு மேற்கொண்டு தெரியவில்லை.ஏதோ பாதி கிணறு தாண்டியது போல இருந்தது. இன்னும் அறிவியல் விளக்கமெல்லாம் நாம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.இப்படி ஒரு அற்புதக் கதையை சொன்ன எடிசன் சாருக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.


மறுநாள் ஓரூ இணையதள மையத்திற்கு சென்று டின் பிளேக் குறித்து பல விபரங்களை தேடினேன். என்ன ஆச்சரியம் இன்னுமொறு சோகக்கதை எனக்கு கிடைத்தது.


அமுன்சென் என்ற விஞ்ஞானி முதன் முறையாக பூமியின் தென் துருவத்தை அடைந்து, வெற்றிகரமாக திரும்பிய ஒரு மாத காலத்தில் ரோபர்ட் ஸ்காட் என்ற இராணுவ தளபதி தலைமையில் ஒரு குழு பூமியின் தென் துருவத்தை ஆய்வு செய்யச் சென்றது.அப்போது குளிர்பிரதேசத்தில் தங்குவதற்கு வசதியாக பெரிய பெரிய டின்களில் மண்ணெண்ணையை நிறைய எடுத்துச் சென்றிருந்தனர். ஆனால் அந்த கடும் குளிரைத் தாங்காமல் டின்களில் விரிசல் ஏற்பட்டு மண்ணெண்ணை முழுவதும் சொட்டுச் சொட்டாக வெளியேறிவிட்டது. இதனால் போதிய உணவு தயாரிக்கவோ, தங்களை சூடேற்றிக்கொள்ளவோ முடியாமல் தவித்தனர். இறுதியில் அந்த குழுவினர் அனைவரும் கடும் குளிரால் இறந்தே போயினர்.


இந்த கதையைப் படித்தப் பிறகு இப்படி ஒரு சோகம் நிகழ்ந்து விட்டதே என மனம் வெம்பியது. மேற்சொன்ன இரு கதைகள் குறித்தும், இது ஏதோ மாய பேய்களின் வேலைகளாகத்தான் இருக்கும் என்று பேசிக் கொண்டனராம். ஆனால் விஞ்ஞானிகள் விரைவிலேயே இதற்கு ஒரு தீர்வி கண்டிருந்தார்கள். பல தனிமங்கள் குறித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள் டின் போன்ற தனிமங்கள் வெப்ப நிலை மாறும்போது அந்த தனிமத்தின் உள் கட்டமைப்பில் மாறுபாடு ஏற்பட்டு புதிய நிலையை அடைகிறது. இதனால் தான் டின் தனிமமானது ஜீரோ டிகிரி வெப்ப நிலைக்கு குறைவாக தள்ளப்படும் போது அந்த தனிமத்தின் உள் கட்டமைப்பில் மாறுபாடு ஏற்பட்டு புதிய நிலையை அடைகிறது. இதனால் டின் தனிமத்தில் விரிசல் ஏற்பட்டு பின்னர் படிப்படியாக பவுடராக மாறிவிடுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்து உலகிற்குச் சொன்னார்கள். அதோடு மட்டுமல்ல, இந்த டின்பிளேக்கைக் குணப்படுத்த பிஸ்மத் ஆண்டிமணி போன்ற தனிமத்தை டின் தனிமத்தில் தேவையான அளவு உள் செலுத்தி அதை உறுதிபடுத்தினார்கள். இதனால் டின் தனிமத்தின் எந்த குளிரையும் தாங்கும் நிலைக்கு மாற்றப்பட்டது. இதன் பிறகே டின்னின் பயன்பாடு வெகுவாக அதிகறித்தது. அது மட்டுமல்ல காற்று, நீர், உப்பு, உணவு, ஏன் நம்மோடுகூட அது வினைபுரியாது. இந்த சாதாரண தகரம் குறித்து இவ்வளவு செய்த்திகளா? என்று ஆச்சரியப்பட தோன்றுகிறதல்லவா!


இப்படியாக என் மாணவன் குறும்புத்தனமாக எழுப்பிய இந்த கேள்விக்கு நான் உண்மையிலேயே விடை கண்டுபிடுத்துவிட்டேன். நாளை மாணவர்களுக்கு இதை உற்சாகமாக எடுத்துச் சொல்வேன் என்று நினைக்கும் போதே பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது.

Comments

  1. சிறப்பான பதிவு மிக கடிமான அறிவியல் செய்திகளை எளிமையான மொழிநடையில் எழுதியதற்கு நன்றி

    ReplyDelete
  2. புதுச்சேரி அன்பழகன்January 11, 2011 at 3:48 AM

    விடுதலைக்கு நன்றி! மற்ற கட்டுரைகளையும் விமர்சிக்கவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது....

மாணவர்கள் கொண்டாடிய சுதந்திர தினவிழா

சு தந்திரதின விழாவில் கொடியேற்றி துவக்கி வைப்பதற்காக, மாணவர் நல சங்கம் சார்பில் என்னை அழைத்திருந்தார்கள். முப்பதாண்டுகாலமாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவன் என்ற தகுதி ஒரு காரணமாக இருக்கலாம். மிக முக்கியமான இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக என்னை தயார் செய்துகொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்படும் ஓசைகேட்டு திறந்தேன். கையில் தேசியக்கொடியோடு மாணவர்கள் சீருடையில் வந்திருந்தனர். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. வாங்க! வாங்க! என்று பரவசத்தோடு உள்ளே அழைத்தேன். அனைவரும் ஒரே குரலில் “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! கொண்டாடுவோம்! என்றபடியே ஒரு வண்ண காகிதத்தை கையில் கொடுத்துவிட்டு அடுத்த வீட்டிற்கு சென்றுவிட்டனர். சுதந்திரமே மாணவர் உருவில் வீட்டு வந்தது போல இருந்தது. அவர்கள் கொடுத்துச்சென்ற காகிதத்தின் இரு பக்கத்திலும் பதினைந்து என்று எண்ணால் எழுதப்பட்டிருந்தது. மெல்ல பிரித்து பார்க்க அது எட்டாக மடிக்கப்பட்டிருந்தது. இது சுதந்திரதினத்தை குறிக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. காகிதத்தின் உள்ளே “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! வறுமையற்ற வளமான ஓர் இந்தியாவை உருவாக்குவோம்! ” எ...