Skip to main content

இன்னொரு மாஞ்சாலை வேண்டாமா?

மாஞ்சாலையில்

இன்று

நடந்து பார்க்கிறேன்!


கொளுத்தும் வெய்யிலில்

ஒதுங்க நிழலின்றி

வெறிச்சோடிக்கிடக்கும்

மாஞ்சாலையில்

இன்று

நடந்து பார்க்கிறேன்


பழைய ஞாபகச் சுவடுகள்

என் முன்னால் நடைபோடுகின்றன!


தாத்தா மாஞ்சாலையைக்

குத்தகைக்கு எடுத்துவிட்டால்

வீடெங்கும் மாம்பழவாசனைதான்!


மாங்காயின் காம்புகளிலிருந்து

வெடித்துக்கிளம்பும்

பாலின் எரிப்புவாசனை

கூடவே சேர்ந்து வீசும்!


வீட்டுச்சுவரிலும் தரையிலும்

கறைப் படிந்தபடியே இருக்கும்!


தாத்தாவின் வேட்டியும்

பாட்டியின் புடவையும்

கறைப் பட்டு பட்டு

சாக்குப் போல மாறிவிடும்!


மாம்பழ சீசன் முடியும்வரை

ஓயாத உழைப்புதான்.


வியாபாரிகள் வந்தபடியே

இருப்பார்கள்!


குழம்பில் கரையாத

கல்மாங்காயைக் கேட்டபடி

பெண்கள் வந்தபடியே

இருப்பார்கள்!


ஊரெங்கும் மாம்பழவாசனையும்

பேச்சுமாகவே இருக்கும்.


கொட்டக்கச்சி,மாவுக்கா,

ஆட்டுக்கறி மாங்கா,

வாழைக்கா மாங்கா,

ருமேனியா,கொட்டமாங்கா,

பச்சரிச்சி மாங்காய்,

என வகை வகையாய்

இளைஞர்கள் பெயர்

வைத்தபடியே இருப்பார்கள்!


அனில்கடித்த பழம் பொறுக்க

சிறுவர்கள் மாஞ்சாலையைச்

சுற்றியபடியே இருப்பார்கள்!


மாங்காய் ஊருகாய் போட

முற்றிய மாங்காய்களை

உறவுப்பெயர் சொல்லி

பெண்கள்

கேட்டப்படியே இருப்பார்கள்!


மாங்காய் பச்சடியோடு,

மாங்காய்-தேங்காய் ஊருகாய்

அரைத்து வைத்தால்

பழையதும் சுடுசோறும்

தானாக இறங்கும்!


இப்படி ஊரின்

வாழ்வோடு கலந்திட்ட

மாஞ்சாலை இன்றில்லை!


மாஞ்சாலையில்

இன்று

நடந்து பார்க்கிறேன்.


பழமூட்டைகளை

வண்டிகட்டி

பாண்டியில் விற்றது

கனவு போல் தோன்றுகிறது


கூத்தியாவீட்டுக்கு

மாம்பழமூட்டைப்போவதாக

பாட்டி சண்டைப் போட்டது

ஞாபகத்திற்கு வருகிறது!


மாம்பழங்களை கல்வீசி

திருடித் தின்றதும்

ஞாபகத்திற்கு வருகிறது!


சூரிய ஒளி

தரையில் படாத

அந்த மாஞ்சாலை இன்றில்லை!


மா, புளி மரங்களை

மீண்டும் நட்டு வளர்க்க

ஏன் தோன்றவில்லை எவர்க்கும்?


பெயர் மட்டும்

மாஞ்சாலை

என்றிருந்தால் போதுமா?


நம் பிள்ளைகளுக்கு

இந்த கவிதை மட்டும் போதுமா?

இன்னொரு மாஞ்சாலை

வேண்டாமா?

Comments

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ்

  இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ் ---- புதுச்சேரி அன்பழகன்.          " டாக்டர் யெல்லபிரகட சுப்பாராவ்   என்ற இந்திய விஞ்ஞானி வாழ்ந்ததால் இன்று உலக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அவரைப்பற்றி நன்கு அறிந்த அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். மருத்துவ உலகிற்கு பல கண்டுபிடிப்புகளையும் பல முன்னெடுப்புகளையும் வழங்கிய அதிசய மனிதர் என்றும் அவர் போற்றப்படுகிறார்.. ஆனாலும் அவரைப்பற்றி   அதிகமாக நாம் கேள்விப்பட்டிருக்க   வாய்ப்பில்லை.         ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரம் என்ற ஊரில் ஒரு ஏழை தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் 1895-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள்   யெல்லபிரகட சுப்பாராவ்   பிறந்தார். தற்போதைய கோவிட்-19 தொற்று போல அன்றைக்கு பிளேக் என்ற தொற்று நோய் பரவியதால் இவரின் தந்தை காலமானார். தன் தந்தையின் இழப்பை சுப்பாராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார்.     தந்தையின் வருமானம் இல்லாமல் குடும்பம் தவித்...

உலகத்தைப் படைத்தது யாரு?

நா ளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள். அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள். “சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! அழகாக படைத்தது யாரு! அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடிகிட்டு அழகாக படைத்தது ...