புத்தகம் என்பது
மனம் வசிக்கிற வீடு!
புத்தகம் என்பது
மனதை வனையும்
ஒரு குயவன்!
இது
தித்திக்கின்ற
ஒரு சின்னக்கடல்!
இது
செழுமையும் வளமையும்
செறிந்த ஒரு
சின்னக் காடு!
கற்பனைச் சிறகுகளால்
கனவுகளைச் சுமக்கும்
ஓர் உயிர்ப்பறவை!
இது மனங்கள்
உரசிக்கொள்ளும்
சிந்தனைப் போர்க்களம்!
புத்த்கம் என்பது
விதைகள் மட்டுமல்ல
விதைகளை விளையவைக்கிற
நாற்றங்கால்!
புத்த்கம் என்பது
முட்டைகள் மட்டுமல்ல
முட்டையை அடைகாக்கும்
கோழி!
இதோ
இன்னொரு
தகப்பன் சாமி!
மனிதநேய மகாநதி
பெருக்கெடுத்து ஓட
தன் மூக்கால் கீறிக்கொண்டே செல்கிறது
இந்த உயிர்ப்பறவை!
அலமாரியில்
ஜவுளிகளை அடுக்கியது போதும்
இனி புத்தகங்களை
அடுக்குங்கள்!
வீடுகட்டுவோரே
இனி பூசை அறையை
புத்தக அறையாக மாற்றுங்கள்!
கழிப்பறையும் நூலகமும்
கட்டித்தாருங்கள்
உலகமே சுத்தமாகுமென்று
உலக சுகாதார நிலையத்திற்கு
சிபாரிசு செய்வோம்!
Comments
Post a Comment