Skip to main content

சிலந்தி வலை மர்மம்

ள்ளியின் நூலகத்தில் மாணவர்களோடு சேர்ந்து நானும் தூசு படிந்த புத்தகங்களை துடைத்து வரிசையாக அடுக்கியபடி இருந்தோம். எனக்கு மாணவர்களை இப்படி நூலகத்தோடு சேர்த்து பார்ப்பதே ஆனந்தமாக இருக்கும்.அவர்கள் அடுக்கியபடியே புத்தகங்கள் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் பேசுவதைக் கேட்பது புல்லரிப்பாக இருக்கும். இதற்காகவே நானும் அவர்களோடு சேர்ந்து புத்தகங்களை வரிசையாக அடுக்குவேன்.

இடையிடையே என்னிடத்தில் ஏராளமான கேள்விகளைக் கேட்பார்கள். என்னால் முடிந்தவரை பதில் சொல்வேன்.அவர்களின் அறிவுத்தேடலை நினைத்து ஆனந்தம் கொள்வேன். ஒரு ஆசிரியருக்கு இதைவிட வேறு என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

நூலகத்தை இப்படி சுத்தப்படுத்தும் போதெல்லாம் சிலந்தி பூச்சிகளைப் பற்றி பேச்சு வரும்.“சார்! இந்த சிலந்தி பூச்சிக்கு எங்கயிருந்துதான் இந்த நூலெல்லாம் கிடைக்கும்” என்றெல்லாம் கேட்பார்கள்.

பூச்சிகளை வலையில் சிக்க வைக்கும் இந்த பூச்சிகளால் என்ன பயன் சார்!என்றான் ஒருவன்.

“வயல்களில் சிலந்தி வலைகட்டுனா அதனால் உழவர்களுக்கு நன்னையுண்டு. பயிர்களை அழிக்கக் கூடிய பூச்சிகள் எல்லாம் இந்த சிலந்தி வலையில் சிக்கினா வெளியே போகமுடியாது. இந்த சிலந்தி அந்த பூச்சிகளை

பிடித்து சாப்பிட்டுவிடும். இதனால் உழவனுக்கு நண்பனாக இந்த சிலந்தி பூச்சி விளங்குது.” என்றான் இன்னொரு மாணவன்.

சார்! வலையை எப்படி சார் அது கட்ட ஆரம்பிக்குது?

“அதன் உமிழ்நீரில் உள்ள பசைத்தன்னையால் சுவற்றில் ஒட்டவைத்து வலை பின்னும்” என்று சொன்னேன்.

“ அப்படியின்னா இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு எப்படி சார் போகும். அது இப்படி அப்படி அந்தரத்துல தாவும் போது விழுந்துவிடாதா? சரியான கேள்வியைக் கேட்டுவிட்டனர் மாணவர்கள். எனக்குதான் பதில் சொல்ல தெரியவில்லை.

“சரி இதற்கு பதிலை நீங்களே தேடுங்கள். இங்கு ‘ஈயும் சிலந்தியும்’ என்ற புத்தகம் இருக்குது தேடி படியுங்கள்” என்று சொல்லிவிட்டு நான் கிளம்மி அடுத்த வகுப்பிற்கு சென்றுவிட்டேன். சிறிது நேரம் கழித்து “ சார் எங்களால கண்டுபிடிக்க முடியல சார், ஆனால் நூலகத்தைச் சுத்தப்படுத்தி விட்டோம் சார்” என்று சாவியை என்னிடம் கொடுத்துவிட்டு மாணவர்கள் சென்று விட்டனர்.

வீட்டுக்கு வந்து ஓய்வெடுத்த பிறகு எனது நூலகத்தை திறந்து பார்த்தேன். “ஈயும் சிலந்தியும்” என்ற புத்தகத்தைத் தேடினேன். ஆனால் அது கிடைக்கவில்லை. அது போன்ற ஒரு சிறிய புத்தகம் ஒன்று தட்டுப்பட்டது. அதை எடுத்து மேலோட்டமாக புரட்டத் தொடங்கினேன். ஒரு பக்கத்தில் சிலந்தி என்ற வார்த்தை கண்ணில்பட்டது. உடனே அந்த பக்கத்தை கூர்ந்து பார்த்தேன். அதில் “ சிலந்தி பூச்சி முதலிலே நூல் செய்து, அதை காற்றிலே விட்டுவிடும். அந்த நூல் காற்றின் செய்கையால் எதிர் புறத்திலே போய் ஒட்டிக்கொள்ளும். பூச்சி அதை அசைத்துப் பார்த்து பற்றியிருப்பது தெரிந்து கொண்டு அதன் பிறகுதான் நூல் மீது நடந்து செல்லும். அப்பால் வலை பின்னத் தொடங்கிவிடும்” என்று தெளிவாக போட்டிருந்தது. இந்த புத்தகம் அறிவியல் புத்தகமா என திருப்பிப்பார்த்தேன். மேலும் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது அறிவியல் புத்தகம் அல்ல.“தராசு” என்ற புத்தகம் பாரதியாரால் எழுதப்பட்டது என தெரிந்துகொண்டேன். பாரதியார் “தராசு” என்ற தலைப்பில் பல விடயங்களை நிறுத்துப்பார்த்து எதுசரி? எது தவறு? என சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறார். அதில் நிறுத்துப்பார்த்த ஒரு கதைதான், இந்த சிலந்தி பற்றியது.

ஒரு சிறிய விடயத்தையும் விட்டுவிடாமல் அவர் சிந்தனையில் பட்டதை எழுதி வைத்துள்ளது எவ்வளவு சிறப்பு என நினைத்துக்கொண்டேன். பாரதியை எண்ணி பெருமையாக இருந்தது. கூடவே நல்ல கேள்விகளை எழுப்பிய மாணவர்களை எண்ணியும் பெருமையாக இருந்தது. அறிவுத்தேடல் இனிக்கும்தானே! நாளை மாணவர்களுக்கு இதை அழகாக எடுத்துச் சொல்வேன் என்று நினைக்கும் போதே மனசெங்கும் பரவசம் தொற்றிக்கொண்டது.

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ்

  இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ் ---- புதுச்சேரி அன்பழகன்.          " டாக்டர் யெல்லபிரகட சுப்பாராவ்   என்ற இந்திய விஞ்ஞானி வாழ்ந்ததால் இன்று உலக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அவரைப்பற்றி நன்கு அறிந்த அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். மருத்துவ உலகிற்கு பல கண்டுபிடிப்புகளையும் பல முன்னெடுப்புகளையும் வழங்கிய அதிசய மனிதர் என்றும் அவர் போற்றப்படுகிறார்.. ஆனாலும் அவரைப்பற்றி   அதிகமாக நாம் கேள்விப்பட்டிருக்க   வாய்ப்பில்லை.         ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரம் என்ற ஊரில் ஒரு ஏழை தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் 1895-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள்   யெல்லபிரகட சுப்பாராவ்   பிறந்தார். தற்போதைய கோவிட்-19 தொற்று போல அன்றைக்கு பிளேக் என்ற தொற்று நோய் பரவியதால் இவரின் தந்தை காலமானார். தன் தந்தையின் இழப்பை சுப்பாராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார்.     தந்தையின் வருமானம் இல்லாமல் குடும்பம் தவித்...

உலகத்தைப் படைத்தது யாரு?

நா ளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள். அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள். “சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! அழகாக படைத்தது யாரு! அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடிகிட்டு அழகாக படைத்தது ...