Skip to main content

சிலந்தி வலை மர்மம்

ள்ளியின் நூலகத்தில் மாணவர்களோடு சேர்ந்து நானும் தூசு படிந்த புத்தகங்களை துடைத்து வரிசையாக அடுக்கியபடி இருந்தோம். எனக்கு மாணவர்களை இப்படி நூலகத்தோடு சேர்த்து பார்ப்பதே ஆனந்தமாக இருக்கும்.அவர்கள் அடுக்கியபடியே புத்தகங்கள் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் பேசுவதைக் கேட்பது புல்லரிப்பாக இருக்கும். இதற்காகவே நானும் அவர்களோடு சேர்ந்து புத்தகங்களை வரிசையாக அடுக்குவேன்.

இடையிடையே என்னிடத்தில் ஏராளமான கேள்விகளைக் கேட்பார்கள். என்னால் முடிந்தவரை பதில் சொல்வேன்.அவர்களின் அறிவுத்தேடலை நினைத்து ஆனந்தம் கொள்வேன். ஒரு ஆசிரியருக்கு இதைவிட வேறு என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

நூலகத்தை இப்படி சுத்தப்படுத்தும் போதெல்லாம் சிலந்தி பூச்சிகளைப் பற்றி பேச்சு வரும்.“சார்! இந்த சிலந்தி பூச்சிக்கு எங்கயிருந்துதான் இந்த நூலெல்லாம் கிடைக்கும்” என்றெல்லாம் கேட்பார்கள்.

பூச்சிகளை வலையில் சிக்க வைக்கும் இந்த பூச்சிகளால் என்ன பயன் சார்!என்றான் ஒருவன்.

“வயல்களில் சிலந்தி வலைகட்டுனா அதனால் உழவர்களுக்கு நன்னையுண்டு. பயிர்களை அழிக்கக் கூடிய பூச்சிகள் எல்லாம் இந்த சிலந்தி வலையில் சிக்கினா வெளியே போகமுடியாது. இந்த சிலந்தி அந்த பூச்சிகளை

பிடித்து சாப்பிட்டுவிடும். இதனால் உழவனுக்கு நண்பனாக இந்த சிலந்தி பூச்சி விளங்குது.” என்றான் இன்னொரு மாணவன்.

சார்! வலையை எப்படி சார் அது கட்ட ஆரம்பிக்குது?

“அதன் உமிழ்நீரில் உள்ள பசைத்தன்னையால் சுவற்றில் ஒட்டவைத்து வலை பின்னும்” என்று சொன்னேன்.

“ அப்படியின்னா இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு எப்படி சார் போகும். அது இப்படி அப்படி அந்தரத்துல தாவும் போது விழுந்துவிடாதா? சரியான கேள்வியைக் கேட்டுவிட்டனர் மாணவர்கள். எனக்குதான் பதில் சொல்ல தெரியவில்லை.

“சரி இதற்கு பதிலை நீங்களே தேடுங்கள். இங்கு ‘ஈயும் சிலந்தியும்’ என்ற புத்தகம் இருக்குது தேடி படியுங்கள்” என்று சொல்லிவிட்டு நான் கிளம்மி அடுத்த வகுப்பிற்கு சென்றுவிட்டேன். சிறிது நேரம் கழித்து “ சார் எங்களால கண்டுபிடிக்க முடியல சார், ஆனால் நூலகத்தைச் சுத்தப்படுத்தி விட்டோம் சார்” என்று சாவியை என்னிடம் கொடுத்துவிட்டு மாணவர்கள் சென்று விட்டனர்.

வீட்டுக்கு வந்து ஓய்வெடுத்த பிறகு எனது நூலகத்தை திறந்து பார்த்தேன். “ஈயும் சிலந்தியும்” என்ற புத்தகத்தைத் தேடினேன். ஆனால் அது கிடைக்கவில்லை. அது போன்ற ஒரு சிறிய புத்தகம் ஒன்று தட்டுப்பட்டது. அதை எடுத்து மேலோட்டமாக புரட்டத் தொடங்கினேன். ஒரு பக்கத்தில் சிலந்தி என்ற வார்த்தை கண்ணில்பட்டது. உடனே அந்த பக்கத்தை கூர்ந்து பார்த்தேன். அதில் “ சிலந்தி பூச்சி முதலிலே நூல் செய்து, அதை காற்றிலே விட்டுவிடும். அந்த நூல் காற்றின் செய்கையால் எதிர் புறத்திலே போய் ஒட்டிக்கொள்ளும். பூச்சி அதை அசைத்துப் பார்த்து பற்றியிருப்பது தெரிந்து கொண்டு அதன் பிறகுதான் நூல் மீது நடந்து செல்லும். அப்பால் வலை பின்னத் தொடங்கிவிடும்” என்று தெளிவாக போட்டிருந்தது. இந்த புத்தகம் அறிவியல் புத்தகமா என திருப்பிப்பார்த்தேன். மேலும் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது அறிவியல் புத்தகம் அல்ல.“தராசு” என்ற புத்தகம் பாரதியாரால் எழுதப்பட்டது என தெரிந்துகொண்டேன். பாரதியார் “தராசு” என்ற தலைப்பில் பல விடயங்களை நிறுத்துப்பார்த்து எதுசரி? எது தவறு? என சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறார். அதில் நிறுத்துப்பார்த்த ஒரு கதைதான், இந்த சிலந்தி பற்றியது.

ஒரு சிறிய விடயத்தையும் விட்டுவிடாமல் அவர் சிந்தனையில் பட்டதை எழுதி வைத்துள்ளது எவ்வளவு சிறப்பு என நினைத்துக்கொண்டேன். பாரதியை எண்ணி பெருமையாக இருந்தது. கூடவே நல்ல கேள்விகளை எழுப்பிய மாணவர்களை எண்ணியும் பெருமையாக இருந்தது. அறிவுத்தேடல் இனிக்கும்தானே! நாளை மாணவர்களுக்கு இதை அழகாக எடுத்துச் சொல்வேன் என்று நினைக்கும் போதே மனசெங்கும் பரவசம் தொற்றிக்கொண்டது.

Comments

Post a Comment

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது....

மாணவர்கள் கொண்டாடிய சுதந்திர தினவிழா

சு தந்திரதின விழாவில் கொடியேற்றி துவக்கி வைப்பதற்காக, மாணவர் நல சங்கம் சார்பில் என்னை அழைத்திருந்தார்கள். முப்பதாண்டுகாலமாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவன் என்ற தகுதி ஒரு காரணமாக இருக்கலாம். மிக முக்கியமான இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக என்னை தயார் செய்துகொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்படும் ஓசைகேட்டு திறந்தேன். கையில் தேசியக்கொடியோடு மாணவர்கள் சீருடையில் வந்திருந்தனர். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. வாங்க! வாங்க! என்று பரவசத்தோடு உள்ளே அழைத்தேன். அனைவரும் ஒரே குரலில் “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! கொண்டாடுவோம்! என்றபடியே ஒரு வண்ண காகிதத்தை கையில் கொடுத்துவிட்டு அடுத்த வீட்டிற்கு சென்றுவிட்டனர். சுதந்திரமே மாணவர் உருவில் வீட்டு வந்தது போல இருந்தது. அவர்கள் கொடுத்துச்சென்ற காகிதத்தின் இரு பக்கத்திலும் பதினைந்து என்று எண்ணால் எழுதப்பட்டிருந்தது. மெல்ல பிரித்து பார்க்க அது எட்டாக மடிக்கப்பட்டிருந்தது. இது சுதந்திரதினத்தை குறிக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. காகிதத்தின் உள்ளே “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! வறுமையற்ற வளமான ஓர் இந்தியாவை உருவாக்குவோம்! ” எ...