Skip to main content

காற்றோடு வந்த செய்தி

னது ஊர் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தேன். என்ன காரணமென்று தெரியவில்லை, பேருந்துவர அதிக நேரமாகுமென்று சக பயணிகள் பேசிக்கொண்டார்கள். அதுவரையில் என்ன செய்வது என்று யோசிக்கையில், யாரோ ஒருவர் பேசிக்கொண்டிருப்பது ஓலிப்பெருக்கியின் வழியாக என் காதுகளுக்கு எட்டியது. நான் கூர்ந்து அவர் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தேன்.

நல்ல தெளிவான குரல். வார்த்தைகள் தன்னம்பிக்கையோடு தைரியமாக வந்து விழுந்து கொண்டிருந்தன . அந்த இனிமையான குரலை கேட்டுகொண்டேயிருக்க வேண்டுமென ஆவல் பிறந்தது. அப்போதுதான் தெரிந்தது அது ஒரு அரசியல் கட்சியின் கூட்டமென்று. அவர் சொன்ன செய்தி எனக்கு வியப்பாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. எங்கள் பகுதியில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தால், இலவசமாக வேட்டி, சேலை, சர்க்கரை, குடை, நோட்டுபுத்தகம், ஊன்முற்றோர்க்கான மிதிவண்டி, வீட்டு உபயோகப்பொருட்கள் போன்றவைகளை கட்சியின் தலைவர்கள் தன்சொந்த செலவில் கட்சியின் அடிமட்ட ஊழியர்களுக்கும் , அவர்கள் சார்ந்த ஆதரவாளர்களுக்கும் வாரி வழங்குவார்கள். இங்கு என்காதில் விழும் செய்தி என்ன வென்றால், கட்சியின் அடிமட்ட ஊழியர் ஒருவர் தனது குடும்பத்தின் மூலம் வந்த சொத்தின் ஒருபகுதியை , அதாவது ஒரு வீட்டு மனையை கட்சிக்காக வழங்கியதை அந்த கட்சியின் தலைவர் பாராட்டி பேசிக்கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல இது போன்று முன்பு கட்சியின் வளர்சிக்காக நிதி வழங்கிய சாதாரண ஊழியர்களையும், தலைவர்களையும் சுட்டிகாட்டி பேசிக்கொண்டிருந்தார். எனக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை, மெல்ல பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றுவிட்டேன். அது ஒரு பொதுவுடைமை கட்சியின் கூட்டமென்று தெரிந்துகொண்டேன். பக்கத்திலிருந்த தோழர் ஒருவருடன் மெல்ல பேச்சு கொடுத்தேன். மற்ற கட்சியில் உள்ள தலைவர்கள் தொண்டர்களுக்கு பணம் வழங்குவார்கள், இங்கு தொண்டராக இருக்கும் நீங்கள் கட்சிக்கு பணம் தருகிறீர்களே! என்று கேட்டேன். எங்கள் கட்சியின் தலைவர்கள் பணம் கொடுப்பதில்லை அதற்கு மாறாக போராட கற்று தருகிறார்கள். அதற்கான அறிவையும் சரியான வழியையும் போதிக்கிறார்கள். அது மட்டுமே தொழிலார்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டுவரும் என்பதை அனுபவத்தின் அடிப்படையில் புரிந்து செயல் செயல்படுகிறோம். சுருக்கமாக சொல்வதென்றால், அவர்கள் மீனைத்தருகிறார்கள்! நாங்களோ தூண்டிலைத் தருகிறோம் !என்று அந்த தோழர் விளக்கினார்.


தொழிலார்களுக்காக பாடுபடும் கட்சியை தொழிலாளர்கள்தான் வளர்க்க வேண்டும், பாதுகாக்க வேண்டும்! இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! என்ற எண்ணம் தோன்றியது. அதுமட்டுமல்ல ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியர் என்ற முறையில் நானும் ஒரு தொழிலாளிதான் என்ற உணர்வு எனக்குள் தோன்றியது. அந்த பொதுக்கூட்டம் முழுவதும் கேட்டுவிட்டு தாமதமாகத்தான் வீடு வந்து சேர்ந்தேன். எனக்கு நானே புதியவனாக தெரிந்தேன். இன்னும் அந்த தலைவர் பேசியது எனக்கு கேட்டுக்கொண்டே யிருந்தது. நேர்மையாளர்களின் சுண்டு விரலைத் தொட்டுவிட்டதைப் போன்று உணர்ந்தேன். மனசுக்குள் நிம்மதி பிறந்த அந்த கணத்தில் மெல்ல தூங்கிப்போனேன்.

Comments

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ்

  இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ் ---- புதுச்சேரி அன்பழகன்.          " டாக்டர் யெல்லபிரகட சுப்பாராவ்   என்ற இந்திய விஞ்ஞானி வாழ்ந்ததால் இன்று உலக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அவரைப்பற்றி நன்கு அறிந்த அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். மருத்துவ உலகிற்கு பல கண்டுபிடிப்புகளையும் பல முன்னெடுப்புகளையும் வழங்கிய அதிசய மனிதர் என்றும் அவர் போற்றப்படுகிறார்.. ஆனாலும் அவரைப்பற்றி   அதிகமாக நாம் கேள்விப்பட்டிருக்க   வாய்ப்பில்லை.         ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரம் என்ற ஊரில் ஒரு ஏழை தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் 1895-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள்   யெல்லபிரகட சுப்பாராவ்   பிறந்தார். தற்போதைய கோவிட்-19 தொற்று போல அன்றைக்கு பிளேக் என்ற தொற்று நோய் பரவியதால் இவரின் தந்தை காலமானார். தன் தந்தையின் இழப்பை சுப்பாராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார்.     தந்தையின் வருமானம் இல்லாமல் குடும்பம் தவித்...

உலகத்தைப் படைத்தது யாரு?

நா ளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள். அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள். “சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! அழகாக படைத்தது யாரு! அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடிகிட்டு அழகாக படைத்தது ...