Skip to main content

எது பெரிய எண்?

எது பெரிய எண்?

மூன்றாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் இரண்டு மாணவர்கள் ஒருவருக்கொருவர் தலையில் குட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். நான் சற்றே கூர்ந்து கவனித்தேன். அவர்களில் ஒரு மாணவன், "நான் இந்த காலாண்டுத் தேர்வுக்கு இருபது கேள்விக்கு பதில் படித்து வைத்துள்ளேன். இந்த இருபது கேள்வியும் கண்டிப்பாக வரும்" என்று சொல்ல , சகமாணவியோ, "அதெப்படி சரியா சொல்ற? அப்படியெல்லாம் வராது" என்று எதிர்வாதம் செய்தாள். உடனே "அப்படி வந்தால் உனக்கு நூறு குட்டு" என்றான் அந்த மாணவன். அவளோ " கண்டிப்பாக வராது" எனக்கூறி `உனக்கு ஆயிரம் கொட்டு` என்றாள். இப்படி இவர்கள் மாறி மாறி கூறிக் கொண்டே வந்தனர். இறுதியில் " இந்த உலகத்திலேயே எது பெரிய எண்ணோ அவ்வளவு குட்டு" என்றான். அவளோ, ஆப்படி என்றால் அது போல் பத்து மடங்கு உனக்கு குட்டு என்றாள். இப்படியாக போய்க் கொண்டே இருந்தது.
சரி! சரி! `நமது ஆட்டத்தை நிறுத்துவோம்` என்று சொல்லி " உண்மையிலேயே உலகில் பெரிய எண் எது? என்று அவர்களுக்குள் கேட்டுக் கொண்டனர். பிறகு இருவரும் யோசித்தவாறே " நமது ஆசிரியரை கேட்போம்" என்று முடிவுக்கு வந்த போது விளையாட்டு நேரம் முடிந்து வகுப்பிற்கு திரும்பினர்.
வகுப்பு முடிந்தவுடன் என்னிடம் வந்தனர், சார்! சார்! எங்களுக்கு ஒரு சந்தேகம். நீங்க தான் பதில் சொல்லனும்" என்றனர். சரி சொல்லுங்கள் " என்றேன். உலகிலேயே பெரிய எண் எது? என்று கேட்டனர். எனக்கு உடனே பதில் சொல்ல தெரியவில்லை. ஆனாலும் `அந்த எண்ணிற்கு முடிவே இல்லை போய்க்கொண்டே இருக்கும்` என்று சொன்னேன். சரி சார்! வருகிறோம்! என்று சொன்னாலும், அவர்கள் முகத்தில் திருப்தி ஏற்படவில்லை என்பதை கவனித்தேன்.

நான் வீட்டுக்கு புறப்பட்டாலும் மாணவர்களின் கேள்விக்கு சரியான பதிலை சிந்தித்து கொண்டேயிருந்தேன். மாணவர்கள் சுதந்திரமாக விளையாடும் போது கணிதத்தின் உச்சத்திற்கே சென்று சிந்தித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த சிந்தனையோடு ஒரு புத்தகக்கடைக்கு சென்றேன். அங்கு ஒரு கணித புத்தகத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று படித்தேன். என்ன ஆச்சரியம்! உலகின் மிகப் பெரிய எண் "கூகோல்" என்றிருந்தது. அதாவது ஒன்றுக்கு பக்கத்தில் நூறு சைபர்கள் போட வேண்டும். இந்த எண்ணை படிக்க முடியாது. ஆனால் பத்தின் அடுக்கு நூறு என்று படிக்கலாம். இதைவிட பெரிய எண் கூகுலோ பிளக்ஸ் என அழைக்கிறார்கள். அதாவது ஒன்றுக்கு பக்கத்தில் நூறு கூகோல் சைபர் போட வேண்டும். என்ன தலை சுற்றுகிறதா? பரவாயில்லை கற்பனை செய்து பாருங்கள்.
நிற்க! எண்ணற்ற இணைய தளங்களை நாம் கணினியில் தேட வேண்டுமென்றால் அதற்கு `கூகுல் சர்ச்` உதவுகிறது அல்லவா? இப்போது புரிகிறதா? இணைய தளங்களை தேடுவதற்கு `கூகுல்` என்று பெயர் வைத்தது ஏனென்று.
என்ன! எங்கோ ஆரம்பித்து கணினியில் முடிந்து விட்டதா? உலகின் மிகப் பெரிய எண் இப்படியாக பல பெயர்களை நாளை பெற்றுக்கொண்டே செல்லலாம். ஆனால் அந்த எண்ணிற்கான மதிப்பை அளவிட முடியுமா?
மறுநாள் அந்த மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம் ஒருவாறு மேற்கண்ட பதிலை கூறினேன். அவர்கள் மிகவும் மகிழ்ந்த படியே வியப்போடு பேசிக்கொண்டு சென்றனர்.
வகுப்பறையில் நாம் கற்றுக் கொடுப்பதற்கும் மாணவர்கள் மிக சுதந்திரமாக விளையாடிக்கொண்டே கற்பதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு தானே!

Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை

மாணவர்கள் கொண்டாடிய அறிவியல் விழா!

             காலை இறைவணக்கத்தை முறைப்படி செலுத்துவதற்காக மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் வரிசையாக நிற்கத் தொடங்கினார்கள். ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களை ஒழுங்கு படித்தியபடியே மேடைக்கு வந்தார்கள். சற்று நேரத்தில் பள்ளியின் முதல்வரும் மேடைக்கு அருகில் வரவும்,, மாணவர்களிடையே சப்தம் படிப்படியாக குறைந்து அமைதி நிலவியது. மாணவத் தலைவர் இறைவணக்கத்தை ஆரம்பித்து வைக்க, மாணவர்கள் ஒரே குரலில் பாடி முடித்தார்கள். சில முக்கியச் செய்திகள் மற்றும் அறிவிப்புகளோடு அன்றைய இறைவணக்க நிகழ்வு முடிவுக்கு வந்தது. மாணவர்கள் தத்தம் வகுப்பிற்குச் செல்லத் தொடங்கினார்கள். மைதானம் வெற்றிடமாக மாறியது. சிறிது நேரத்தில் மீண்டும் சில மாணவர்கள் மைதானத்தை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக ஓடினார்கள். பள்ளி முதல்வர் தொடங்கி ஆசிரியர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏன் சில மாணவர்கள் மட்டும் மீண்டும் ஏதோ அணிவகுப்பு நடத்த முயற்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை!. மீண்டும் மைதானத்தில் ஓடிய மாணவர்கள் ஏதோ ஒரு ஒழுங்கிற்கு வந்தது போல தெரிந்தது. குறுக்கும் நெடுக்குமாக ஒரு அட்

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது.