இடித்துப் போட மனசில்லை
வளர்ந்து ஆளாக
இடம் தந்த மண் குடிசையை!
நாங்கள் வளர்ந்த கதையை
நாங்களே
தித்திப்பாய்ச் சொல்லிக்கொள்ள
ஒவ்வொரு முறையும்
வாய்ப்பளிக்கிறது!
நினைவில் படிந்துகிடக்கும்
ஒவ்வொரு அடுக்கும்
நெகிழ்ந்து
மேலெழும்புகிறது!
குழந்தை பருவத்திற்கு
கீழிறங்கவும்
வாலிப பருவத்திற்கு
மேலேறவுமான
நினைவுகளில்
தத்தளிக்கிறது மனசு!
திருட்டுத்தனமாய் நடந்த
விசயங்களை
இப்பொழுது அம்பலபடுத்தி
மகிழ முடிகிறது!
தரை மொழிகிக்கொண்டே
சகல இன்ப துன்பங்களை
பேசி மகிழ்ந்த நாட்கள்
பூரித்து பொங்குகிறது!
மனசை
பூசி மொழுக முடிவதில்லை
வாய்ப்பு கிடைக்கும் பொழுது
வெடித்துக் கிளம்புகிறது!
எங்களுக்கென்று
மச்சுவீடு,
குழந்தை குட்டிகளென
தனித்தனியாக ஆகிவிட்டாலும்
இந்த மண்குடிசையை
களைத்துப்போட
எங்களால் இயலவில்லை!
அம்பிகா-சண்முகம் தம்பதிகளின்
ஐந்து பெண் பிள்ளைகளும்
ஒரே ஆண் பிள்ளையுமான
ஒரு பெருங்குடும்பமே
வாழ இடம்தந்த
இந்த மண்குடிசையை
காலம் சிதைத்தாலும்
கவிதைக்கெல்லாம் கவிதையாய்
எங்கள் நெஞ்சாங் கூட்டுக்குள்
வாழ்ந்து கொண்டிருக்கிறது
என்றும் அழிக்கமுடியாதபடி!
அருமையா இருக்குங்க...
ReplyDeletearumai nanbar Arasanukku nantri! ungal aatharavu thotarattum
ReplyDelete