பத்திரிக்கைக்கு
எனது மகள் வரைந்த படத்தை
அனுப்பிவைத்தேன்.
எனது மகளின் படத்தோடு
பெயரும் அழகாய் வந்திருந்தது.
ஆசையோடு
எனது மகளை அழைத்து காட்டினேன்.
சற்றே மகிழ்ந்தவளின் முகம்
பட்டென சுருங்கியது.
பக்கத்து வீட்டு தோழியின் பெயரையும்
எனது பெயரோடு சேர்த்து
ஏன் போடவில்லை என
அழ ஆரம்பித்துவிட்டாள்.
நான் சமாதானப்படுத்தியபடியே
சிந்திக்க ஆரம்பித்திவிட்டேன்.
உறவுச் சிறகுகளை விரித்து
பறந்தபடியே இருக்கும்
குழந்தைகளின் பரந்த உலகை
எண்ணி வியந்தேன்.
தொலைத்து விட்டு
வெறுமனே வாழ்வதாக
Comments
Post a Comment