தமிழ்
இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் மறைந்துவிட்டார்.
தமிழ் இலக்கியதில் புதிய தடம்
பதித்தவர்.
நாட்டுப்புற மக்களின் பேச்சு மொழியில்
துணிந்து இலக்கியம் படைத்தவர். அவர் ஒரு கிராமத்து பெரியவராக ஞானத்தந்தையாக
விளங்கியவர். அவரிடம் சற்று நேரம் பேசினால் போதும் அவர் ஞானத்தை அறிந்து
கொள்ளலாம். எதைப்ற்றிக் கேட்டாலும் அதற்குறிய வரலாற்று உணர்வோடு அவருக்கே உரிய
தெளிவோடு தனது கருத்தைச் சொல்வார். அதற்கு பின்புலமாக ஏதேனும் கதையோ சம்பவமோ
சொல்லாமல் இருக்கமாட்டார். எவ்வளவு நேரமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
மிகப்பொறுமையாக கேட்பவர் ரசிக்கும்படி சொல்வார். கரிசல் நிலத்தின் நூற்றாண்டு கால
நினைவுகளை தொல் கதைகளை தனது கதைகளில் எழுதிக்கொண்டே இருந்தார். அவர் ஒரு தீராத
கதைசொல்லி. அவர் வாயால் இனி கதைகேட்கும் வாய்ப்பு நமக்கெல்லாம் இல்லை. அவர்
நினைவுகள் நம்மை வழிநடத்தும்.
கி.ராஜநாராயணன் இறுதி
நிகழ்வு அரசு
மரியாதையுடன் நடைபெற்றுள்ளது. புதுவை மற்றும் தமிழக அரசுகளை மனதார
பாராட்டலாம். நிகரற்ற அவரின் படைப்புகளைப் போல கி.ரா என்ற மகா கலைஞன் என்றும்
வாழ்வார்.
Comments
Post a Comment