Skip to main content

தாத்தவும் பேத்தியும்………. வெறும் ஸ்கூட்டர் பயணமல்ல! எதிர்கால வாழ்வின் பயணம்! தொடரட்டும்!

 

தாத்தவும் பேத்தியும்……….                                                             வெறும் ஸ்கூட்டர் பயணமல்ல!  எதிர்கால வாழ்வின் பயணம்! தொடரட்டும்!“தாத்தவும் பேத்தியும்”  என்ற குருநாவலை  வாசித்தேன். மகிழ்ந்து வாசித்துகொண்டே வந்த நம்மீது,  நம்சமூகத்தின் மீது ஒரு சாட்டையடி  வந்து விழுகிறது. இந்த சூழல் எப்பொழுது மாறும் என்று  ஏங்க வைத்து விடுகிறார்.

சரி கதைக்கு வருவோம்!

பேத்தியை பள்ளிக்கு அழைத்துச் செல்வதும் வருவதும் அவருக்கும் விருப்பமான செயலாகிவிடுகிறது. பேத்தியின்  மழலைச் சொற்களுக்காக மட்டுமல்ல அவள் எழுப்புகிற் விந்தையான கேள்விகளுக்கு அவராமல் பதில் சொல்லமுடியாமல் திணருகிறார். அவள் எழுப்பும் கேள்விகளை அவர் ஒருபொழுதும் தடுப்பதில்லை. அவர் மிகவும் விரும்பி ரசித்து கேட்பது அவருக்கும சுகமாக இருக்கிறது. மொட்டு மலர்வது பொல புதுப்புது சிந்தனைகள் அரும்புவதில் வியந்து போகிறார். இத்தனை சிந்தனைகளா! இந்த குழந்தைகள் வாழ்வின் அற்புதங்கள் என்று ஒவ்வொரு நாளும் வியந்து போகிறார்.

அப்படிபட்ட தன் பேத்தி ரேங்கில் சற்று குறைந்து விட்டால் என்பற்காக போ ! வெளியில போய் நில்லு! என்று அவளின் தாய் சொல்லிவிடுகிறாள். அந்த தாயோ ஒரு கல்லூரி பேராசிரியர். இந்த வார்த்தைகளை கேட்ட  தாத்தா உடைந்து போகிறார். இந்த தாத்தா சாதாரண நபரில்லை! அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். நமது இந்திய கல்விமுறையைப் பற்றி நன்கு அறிந்தவர். அதை மாற்ற வேண்டுமென துடிப்பவர்.

குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியாக வாழ உரிமை உண்டு என்பதை அறியாமல் நாம் வாழ்கிறோம். அவர்களின் உரிமைகளை புரிந்து கொள்ளாத பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலையை எண்ணி வருத்தமடைகிறார் எல்லா குழந்தைகளும் திறமையானவர்கள் தான் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவர்.

ஆனாலும் இந்த நிலமை மாறும் என்ற நம்பிக்கையோடு தன் பேத்தியின் கேள்விகளில் மகிழ்ந்தபடி எப்பொழுதும்போல பள்ளிக்கூடத்திற்கு  அழைத்துச் செல்வதாக கதை முடிகிறது.

குழந்தைகளிடம் நூறு திறமைகள் புதைந்து கிடக்கின்றன, மதிப்பெண் என்ற ஒரு அளவுகோல் மட்டும் போதாது என்பதை நாம் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற பேராசியர் மாடசாமி சொன்ன வார்த்தைகள் எனக்கு இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

உங்களுக்கும்தானே! குழந்தைகளுக்கு மகிழ்வான சூழலை உருவாக்குவோம்! அவர்கள் திறமையானவர்களாக நிச்சயம் வருவார்கள்.

இன்னும் பல கதைகள் அவர் எழுதவேண்டுமென வாழ்த்தி விடைபெறுகிறேன்.

அன்புடன்

அன்பழகன்

Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை

மாணவர்கள் கொண்டாடிய அறிவியல் விழா!

             காலை இறைவணக்கத்தை முறைப்படி செலுத்துவதற்காக மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் வரிசையாக நிற்கத் தொடங்கினார்கள். ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களை ஒழுங்கு படித்தியபடியே மேடைக்கு வந்தார்கள். சற்று நேரத்தில் பள்ளியின் முதல்வரும் மேடைக்கு அருகில் வரவும்,, மாணவர்களிடையே சப்தம் படிப்படியாக குறைந்து அமைதி நிலவியது. மாணவத் தலைவர் இறைவணக்கத்தை ஆரம்பித்து வைக்க, மாணவர்கள் ஒரே குரலில் பாடி முடித்தார்கள். சில முக்கியச் செய்திகள் மற்றும் அறிவிப்புகளோடு அன்றைய இறைவணக்க நிகழ்வு முடிவுக்கு வந்தது. மாணவர்கள் தத்தம் வகுப்பிற்குச் செல்லத் தொடங்கினார்கள். மைதானம் வெற்றிடமாக மாறியது. சிறிது நேரத்தில் மீண்டும் சில மாணவர்கள் மைதானத்தை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக ஓடினார்கள். பள்ளி முதல்வர் தொடங்கி ஆசிரியர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏன் சில மாணவர்கள் மட்டும் மீண்டும் ஏதோ அணிவகுப்பு நடத்த முயற்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை!. மீண்டும் மைதானத்தில் ஓடிய மாணவர்கள் ஏதோ ஒரு ஒழுங்கிற்கு வந்தது போல தெரிந்தது. குறுக்கும் நெடுக்குமாக ஒரு அட்

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது.