Skip to main content

தாத்தவும் பேத்தியும்………. வெறும் ஸ்கூட்டர் பயணமல்ல! எதிர்கால வாழ்வின் பயணம்! தொடரட்டும்!

 

தாத்தவும் பேத்தியும்……….                                                             வெறும் ஸ்கூட்டர் பயணமல்ல!  எதிர்கால வாழ்வின் பயணம்! தொடரட்டும்!“தாத்தவும் பேத்தியும்”  என்ற குருநாவலை  வாசித்தேன். மகிழ்ந்து வாசித்துகொண்டே வந்த நம்மீது,  நம்சமூகத்தின் மீது ஒரு சாட்டையடி  வந்து விழுகிறது. இந்த சூழல் எப்பொழுது மாறும் என்று  ஏங்க வைத்து விடுகிறார்.

சரி கதைக்கு வருவோம்!

பேத்தியை பள்ளிக்கு அழைத்துச் செல்வதும் வருவதும் அவருக்கும் விருப்பமான செயலாகிவிடுகிறது. பேத்தியின்  மழலைச் சொற்களுக்காக மட்டுமல்ல அவள் எழுப்புகிற் விந்தையான கேள்விகளுக்கு அவராமல் பதில் சொல்லமுடியாமல் திணருகிறார். அவள் எழுப்பும் கேள்விகளை அவர் ஒருபொழுதும் தடுப்பதில்லை. அவர் மிகவும் விரும்பி ரசித்து கேட்பது அவருக்கும சுகமாக இருக்கிறது. மொட்டு மலர்வது பொல புதுப்புது சிந்தனைகள் அரும்புவதில் வியந்து போகிறார். இத்தனை சிந்தனைகளா! இந்த குழந்தைகள் வாழ்வின் அற்புதங்கள் என்று ஒவ்வொரு நாளும் வியந்து போகிறார்.

அப்படிபட்ட தன் பேத்தி ரேங்கில் சற்று குறைந்து விட்டால் என்பற்காக போ ! வெளியில போய் நில்லு! என்று அவளின் தாய் சொல்லிவிடுகிறாள். அந்த தாயோ ஒரு கல்லூரி பேராசிரியர். இந்த வார்த்தைகளை கேட்ட  தாத்தா உடைந்து போகிறார். இந்த தாத்தா சாதாரண நபரில்லை! அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். நமது இந்திய கல்விமுறையைப் பற்றி நன்கு அறிந்தவர். அதை மாற்ற வேண்டுமென துடிப்பவர்.

குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியாக வாழ உரிமை உண்டு என்பதை அறியாமல் நாம் வாழ்கிறோம். அவர்களின் உரிமைகளை புரிந்து கொள்ளாத பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலையை எண்ணி வருத்தமடைகிறார் எல்லா குழந்தைகளும் திறமையானவர்கள் தான் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவர்.

ஆனாலும் இந்த நிலமை மாறும் என்ற நம்பிக்கையோடு தன் பேத்தியின் கேள்விகளில் மகிழ்ந்தபடி எப்பொழுதும்போல பள்ளிக்கூடத்திற்கு  அழைத்துச் செல்வதாக கதை முடிகிறது.

குழந்தைகளிடம் நூறு திறமைகள் புதைந்து கிடக்கின்றன, மதிப்பெண் என்ற ஒரு அளவுகோல் மட்டும் போதாது என்பதை நாம் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற பேராசியர் மாடசாமி சொன்ன வார்த்தைகள் எனக்கு இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

உங்களுக்கும்தானே! குழந்தைகளுக்கு மகிழ்வான சூழலை உருவாக்குவோம்! அவர்கள் திறமையானவர்களாக நிச்சயம் வருவார்கள்.

இன்னும் பல கதைகள் அவர் எழுதவேண்டுமென வாழ்த்தி விடைபெறுகிறேன்.

அன்புடன்

அன்பழகன்

Comments

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ்

  இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ் ---- புதுச்சேரி அன்பழகன்.          " டாக்டர் யெல்லபிரகட சுப்பாராவ்   என்ற இந்திய விஞ்ஞானி வாழ்ந்ததால் இன்று உலக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அவரைப்பற்றி நன்கு அறிந்த அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். மருத்துவ உலகிற்கு பல கண்டுபிடிப்புகளையும் பல முன்னெடுப்புகளையும் வழங்கிய அதிசய மனிதர் என்றும் அவர் போற்றப்படுகிறார்.. ஆனாலும் அவரைப்பற்றி   அதிகமாக நாம் கேள்விப்பட்டிருக்க   வாய்ப்பில்லை.         ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரம் என்ற ஊரில் ஒரு ஏழை தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் 1895-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள்   யெல்லபிரகட சுப்பாராவ்   பிறந்தார். தற்போதைய கோவிட்-19 தொற்று போல அன்றைக்கு பிளேக் என்ற தொற்று நோய் பரவியதால் இவரின் தந்தை காலமானார். தன் தந்தையின் இழப்பை சுப்பாராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார்.     தந்தையின் வருமானம் இல்லாமல் குடும்பம் தவித்...

உலகத்தைப் படைத்தது யாரு?

நா ளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள். அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள். “சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! அழகாக படைத்தது யாரு! அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடிகிட்டு அழகாக படைத்தது ...