எது
சரி?
ஒரு பட்டிமன்ற நிகழ்வை தொலைக்காட்சியில் குடும்பத்தோடு
பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் ஒரு கல்வியாளர் அற்புதமாக பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசும்போது ஒரு
நிகழ்வை குறிப்பிட்டார்.
குடும்பத்தலைவர்கள்
தன் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது மற்றும் அவர்களின் கல்விக்கான
பணத்தேவைகளை பூர்த்திச்செய்வது போன்றவற்றை தன் கடமையாக கொள்கின்றனர். ஆனால் ஒரு குடும்பத்தலைவிதான்
தன் பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுத்து அவர்களின் கல்விக்கு உதவுவதில்
பெரும்பங்கு வகிக்கிறார்கள். அதுவும் குடும்பத்தலைவி ஒரு பட்டதாரியாக இருந்துவிட்டால்
ஒரு தலைமுறையே மாற்றமடைகிறது என்று தன் கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
அனைவரும் கைதட்டி ஆமோத்தித்தனர். நாங்களும்
வீட்டிலிருந்தபடியே கைதட்டினோம்.
இதற்கு ஏன் கைதட்டி ஆமோதிக்கிறீர்கள்! என்று
என் மகள் எங்களைப் பார்த்து கேட்டாள்.
அவர்
சரியாகத்தானே பேசினார் என்று குடும்பத்தலைவனாகிய நான் சொன்னேன்.
அய்யோ!
அப்பா! நீங்கதான் எல்லாம் செய்யரிங்க. அம்மா எனக்கு வீட்டுப்பாடம்
சொல்லிக்கொடுக்கும்போது நீங்க தொலைக்காட்சி தானே பார்த்துக் கொண்டு
இருக்கிறீர்கள். நீங்களும் உதவினால் இன்னும் எங்களுக்கு உதவியாக இருக்கும் அல்லவா!
என்றாள்.
அது
இல்லம்மா! படிக்காத பெற்றோர்கள் உள்ள குடும்பத்தையே அவர் சுட்டிக்காட்டினார்
என்றேன் நான்.
ஏம்பா
நீங்க படிச்சிரிக்கிறீங்க, ஆனால் எனக்கு ஏன் நீங்க விட்டுபாடத்தில் உதவி செய்யவில்லை என்று
கேட்டாள். நான் அமைதியாக இருந்தேன்.
இந்த
பேச்சு ஒருவகையில் பெண்களுக்கு பெருமையாக இருந்தாலும், இந்த வேலையையும் பெண்கள் தலையில்
கட்டுவது சரியா என்றாள். இருவருமே பிள்ளைகளின் கல்வியில் அக்கறைக்காட்டினால்
இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா! என்றாள் என் மகள்.
நீ
சொல்வது சரிதாம்மா! பட்டிமன்ற பேச்சின் வேகத்தில் கைத்தட்டி மகிழ்ந்து விட்டேன்.
உனது
சிந்தனை சரிதான்! வாழ்த்துகள்! என்றேன் நான்.
அவள்
அகமகிழ்ந்து உள்ளே சென்றாள்.
Comments
Post a Comment