Skip to main content

எது சரி?

எது சரி?

              ஒரு பட்டிமன்ற நிகழ்வை தொலைக்காட்சியில் குடும்பத்தோடு பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் ஒரு கல்வியாளர் அற்புதமாக  பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசும்போது ஒரு நிகழ்வை குறிப்பிட்டார்.         

            குடும்பத்தலைவர்கள் தன் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது மற்றும் அவர்களின் கல்விக்கான பணத்தேவைகளை பூர்த்திச்செய்வது போன்றவற்றை தன் கடமையாக கொள்கின்றனர். ஆனால் ஒரு குடும்பத்தலைவிதான் தன் பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுத்து அவர்களின் கல்விக்கு உதவுவதில் பெரும்பங்கு வகிக்கிறார்கள். அதுவும் குடும்பத்தலைவி ஒரு பட்டதாரியாக இருந்துவிட்டால் ஒரு தலைமுறையே மாற்றமடைகிறது என்று தன் கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

             அனைவரும் கைதட்டி ஆமோத்தித்தனர். நாங்களும் வீட்டிலிருந்தபடியே கைதட்டினோம்.

              இதற்கு ஏன் கைதட்டி ஆமோதிக்கிறீர்கள்! என்று என் மகள் எங்களைப் பார்த்து கேட்டாள்.

            அவர் சரியாகத்தானே பேசினார் என்று குடும்பத்தலைவனாகிய நான் சொன்னேன்.

            அய்யோ! அப்பா! நீங்கதான் எல்லாம் செய்யரிங்க. அம்மா எனக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்கும்போது நீங்க தொலைக்காட்சி தானே பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்களும் உதவினால் இன்னும் எங்களுக்கு உதவியாக இருக்கும் அல்லவா! என்றாள்.

            அது இல்லம்மா! படிக்காத பெற்றோர்கள் உள்ள குடும்பத்தையே அவர் சுட்டிக்காட்டினார் என்றேன் நான்.

            ஏம்பா நீங்க படிச்சிரிக்கிறீங்க, ஆனால் எனக்கு ஏன் நீங்க விட்டுபாடத்தில் உதவி செய்யவில்லை என்று கேட்டாள். நான் அமைதியாக இருந்தேன்.

            இந்த பேச்சு ஒருவகையில் பெண்களுக்கு பெருமையாக இருந்தாலும், இந்த வேலையையும் பெண்கள் தலையில் கட்டுவது சரியா என்றாள். இருவருமே பிள்ளைகளின் கல்வியில் அக்கறைக்காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா! என்றாள் என் மகள்.

            நீ சொல்வது சரிதாம்மா! பட்டிமன்ற பேச்சின் வேகத்தில் கைத்தட்டி மகிழ்ந்து விட்டேன்.

            உனது சிந்தனை சரிதான்! வாழ்த்துகள்! என்றேன் நான்.

            அவள் அகமகிழ்ந்து உள்ளே சென்றாள்.


Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை

மாணவர்கள் கொண்டாடிய அறிவியல் விழா!

             காலை இறைவணக்கத்தை முறைப்படி செலுத்துவதற்காக மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் வரிசையாக நிற்கத் தொடங்கினார்கள். ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களை ஒழுங்கு படித்தியபடியே மேடைக்கு வந்தார்கள். சற்று நேரத்தில் பள்ளியின் முதல்வரும் மேடைக்கு அருகில் வரவும்,, மாணவர்களிடையே சப்தம் படிப்படியாக குறைந்து அமைதி நிலவியது. மாணவத் தலைவர் இறைவணக்கத்தை ஆரம்பித்து வைக்க, மாணவர்கள் ஒரே குரலில் பாடி முடித்தார்கள். சில முக்கியச் செய்திகள் மற்றும் அறிவிப்புகளோடு அன்றைய இறைவணக்க நிகழ்வு முடிவுக்கு வந்தது. மாணவர்கள் தத்தம் வகுப்பிற்குச் செல்லத் தொடங்கினார்கள். மைதானம் வெற்றிடமாக மாறியது. சிறிது நேரத்தில் மீண்டும் சில மாணவர்கள் மைதானத்தை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக ஓடினார்கள். பள்ளி முதல்வர் தொடங்கி ஆசிரியர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏன் சில மாணவர்கள் மட்டும் மீண்டும் ஏதோ அணிவகுப்பு நடத்த முயற்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை!. மீண்டும் மைதானத்தில் ஓடிய மாணவர்கள் ஏதோ ஒரு ஒழுங்கிற்கு வந்தது போல தெரிந்தது. குறுக்கும் நெடுக்குமாக ஒரு அட்

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது.