Skip to main content

எது சரி?

எது சரி?

              ஒரு பட்டிமன்ற நிகழ்வை தொலைக்காட்சியில் குடும்பத்தோடு பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் ஒரு கல்வியாளர் அற்புதமாக  பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசும்போது ஒரு நிகழ்வை குறிப்பிட்டார்.         

            குடும்பத்தலைவர்கள் தன் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது மற்றும் அவர்களின் கல்விக்கான பணத்தேவைகளை பூர்த்திச்செய்வது போன்றவற்றை தன் கடமையாக கொள்கின்றனர். ஆனால் ஒரு குடும்பத்தலைவிதான் தன் பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுத்து அவர்களின் கல்விக்கு உதவுவதில் பெரும்பங்கு வகிக்கிறார்கள். அதுவும் குடும்பத்தலைவி ஒரு பட்டதாரியாக இருந்துவிட்டால் ஒரு தலைமுறையே மாற்றமடைகிறது என்று தன் கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

             அனைவரும் கைதட்டி ஆமோத்தித்தனர். நாங்களும் வீட்டிலிருந்தபடியே கைதட்டினோம்.

              இதற்கு ஏன் கைதட்டி ஆமோதிக்கிறீர்கள்! என்று என் மகள் எங்களைப் பார்த்து கேட்டாள்.

            அவர் சரியாகத்தானே பேசினார் என்று குடும்பத்தலைவனாகிய நான் சொன்னேன்.

            அய்யோ! அப்பா! நீங்கதான் எல்லாம் செய்யரிங்க. அம்மா எனக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்கும்போது நீங்க தொலைக்காட்சி தானே பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்களும் உதவினால் இன்னும் எங்களுக்கு உதவியாக இருக்கும் அல்லவா! என்றாள்.

            அது இல்லம்மா! படிக்காத பெற்றோர்கள் உள்ள குடும்பத்தையே அவர் சுட்டிக்காட்டினார் என்றேன் நான்.

            ஏம்பா நீங்க படிச்சிரிக்கிறீங்க, ஆனால் எனக்கு ஏன் நீங்க விட்டுபாடத்தில் உதவி செய்யவில்லை என்று கேட்டாள். நான் அமைதியாக இருந்தேன்.

            இந்த பேச்சு ஒருவகையில் பெண்களுக்கு பெருமையாக இருந்தாலும், இந்த வேலையையும் பெண்கள் தலையில் கட்டுவது சரியா என்றாள். இருவருமே பிள்ளைகளின் கல்வியில் அக்கறைக்காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா! என்றாள் என் மகள்.

            நீ சொல்வது சரிதாம்மா! பட்டிமன்ற பேச்சின் வேகத்தில் கைத்தட்டி மகிழ்ந்து விட்டேன்.

            உனது சிந்தனை சரிதான்! வாழ்த்துகள்! என்றேன் நான்.

            அவள் அகமகிழ்ந்து உள்ளே சென்றாள்.


Comments

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ்

  இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ் ---- புதுச்சேரி அன்பழகன்.          " டாக்டர் யெல்லபிரகட சுப்பாராவ்   என்ற இந்திய விஞ்ஞானி வாழ்ந்ததால் இன்று உலக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அவரைப்பற்றி நன்கு அறிந்த அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். மருத்துவ உலகிற்கு பல கண்டுபிடிப்புகளையும் பல முன்னெடுப்புகளையும் வழங்கிய அதிசய மனிதர் என்றும் அவர் போற்றப்படுகிறார்.. ஆனாலும் அவரைப்பற்றி   அதிகமாக நாம் கேள்விப்பட்டிருக்க   வாய்ப்பில்லை.         ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரம் என்ற ஊரில் ஒரு ஏழை தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் 1895-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள்   யெல்லபிரகட சுப்பாராவ்   பிறந்தார். தற்போதைய கோவிட்-19 தொற்று போல அன்றைக்கு பிளேக் என்ற தொற்று நோய் பரவியதால் இவரின் தந்தை காலமானார். தன் தந்தையின் இழப்பை சுப்பாராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார்.     தந்தையின் வருமானம் இல்லாமல் குடும்பம் தவித்...

உலகத்தைப் படைத்தது யாரு?

நா ளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள். அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள். “சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! அழகாக படைத்தது யாரு! அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடிகிட்டு அழகாக படைத்தது ...