Skip to main content

வாழ்வின் தெறிப்பு

      வாழ்வின் தெறிப்பு

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்சியை ஒருநாள் பார்க்க நேர்ந்தது. அதில் பூவையார் என்ற சிறுவன் மிகச் சிறப்பாக பாடினான். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

     அதில் பூவையார் பற்றிய ஒரு குறும்படம் ஒளிபரப்பானது. அதில்  அவனின் தாய் கண்ணீரோடு அவன் அருகில் இருந்தாள். பூவையார் சிறுவனாக இருக்கும் போதே அவனின் தந்தையார் இறந்து விட்டார். அந்த குடிசை வீட்டில் தன் தாயின் சொற்ப வருமானத்தில் அவன் வாழ்க்கை நகர்கிறது. கானா பாட்டு பாடுபவர்களோடு ஆர்வம் ஏற்பட்டு அந்த குழுவில் சேர்ந்து பாட கற்றுக்கொள்கிறான். அவனது குரலில் ஒரு புதுமையும் ஈர்ப்பும் மிளிர்கிறது. இதனால் அவனும் பல கச்சேரிகளில் பாடி புகழ் பெறுகிறான். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்சியிலும் பங்கேற்று அனைவரது மனதையும் கவர்ந்து விட்டான். இப்படியாக அந்த குறும்படம் அவனின் எளிய வாழ்வை எடுத்துக் காட்டியது.

     அப்போது அவனின் தாயிடம் ஒரு கேள்வி கேட்கிறார்கள். இந்த சின்ன வயதில் அவன் பாடி பணம் கொண்டு வருவது உங்களுக்கு எப்படி இருக்கிறது!?அவனது தந்தை இல்லாத இடத்தை அவன் நிரப்புவதாக நான் நினைக்க வில்லை. எனது கஷ்டத்தில் அவனும் பங்கு பெறுகிறான் என்பதே எனக்கு ஆறுதலாக உள்ளது”. என்று அந்த ஏழை தாய் சொன்னபோது அனைவரும் அப்படியே அசந்து போனார்கள். எப்படி அவர்கள் வாழ்க்கையை அழகாகவும் சரியாகவும் பார்க்கிறார்கள் என்று நானும் அசந்துபோனேன். உடனே இதை குறித்து வைக்க வேண்டுமென  பதிந்து விட்டேன். நாளை பூவையார் ஒரு நல்ல பாடகராக வருவதற்கு  நல்ல இதயங்கள் வாய்ப்பு வழங்கட்டும்.


Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது....

மாணவர்கள் கொண்டாடிய சுதந்திர தினவிழா

சு தந்திரதின விழாவில் கொடியேற்றி துவக்கி வைப்பதற்காக, மாணவர் நல சங்கம் சார்பில் என்னை அழைத்திருந்தார்கள். முப்பதாண்டுகாலமாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவன் என்ற தகுதி ஒரு காரணமாக இருக்கலாம். மிக முக்கியமான இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக என்னை தயார் செய்துகொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்படும் ஓசைகேட்டு திறந்தேன். கையில் தேசியக்கொடியோடு மாணவர்கள் சீருடையில் வந்திருந்தனர். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. வாங்க! வாங்க! என்று பரவசத்தோடு உள்ளே அழைத்தேன். அனைவரும் ஒரே குரலில் “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! கொண்டாடுவோம்! என்றபடியே ஒரு வண்ண காகிதத்தை கையில் கொடுத்துவிட்டு அடுத்த வீட்டிற்கு சென்றுவிட்டனர். சுதந்திரமே மாணவர் உருவில் வீட்டு வந்தது போல இருந்தது. அவர்கள் கொடுத்துச்சென்ற காகிதத்தின் இரு பக்கத்திலும் பதினைந்து என்று எண்ணால் எழுதப்பட்டிருந்தது. மெல்ல பிரித்து பார்க்க அது எட்டாக மடிக்கப்பட்டிருந்தது. இது சுதந்திரதினத்தை குறிக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. காகிதத்தின் உள்ளே “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! வறுமையற்ற வளமான ஓர் இந்தியாவை உருவாக்குவோம்! ” எ...