Skip to main content

மாணவர்கள் கொண்டாடிய சுதந்திர தினவிழா

சுதந்திரதின விழாவில் கொடியேற்றி துவக்கி வைப்பதற்காக, மாணவர் நல சங்கம் சார்பில் என்னை அழைத்திருந்தார்கள். முப்பதாண்டுகாலமாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவன் என்ற தகுதி ஒரு காரணமாக இருக்கலாம். மிக முக்கியமான இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக என்னை தயார் செய்துகொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்படும் ஓசைகேட்டு திறந்தேன். கையில் தேசியக்கொடியோடு மாணவர்கள் சீருடையில் வந்திருந்தனர். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. வாங்க! வாங்க! என்று பரவசத்தோடு உள்ளே அழைத்தேன். அனைவரும் ஒரே குரலில் “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! கொண்டாடுவோம்! என்றபடியே ஒரு வண்ண காகிதத்தை கையில் கொடுத்துவிட்டு அடுத்த வீட்டிற்கு சென்றுவிட்டனர். சுதந்திரமே மாணவர் உருவில் வீட்டு வந்தது போல இருந்தது.

அவர்கள் கொடுத்துச்சென்ற காகிதத்தின் இரு பக்கத்திலும் பதினைந்து என்று எண்ணால் எழுதப்பட்டிருந்தது. மெல்ல பிரித்து பார்க்க அது எட்டாக மடிக்கப்பட்டிருந்தது. இது சுதந்திரதினத்தை குறிக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. காகிதத்தின் உள்ளே “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! வறுமையற்ற வளமான ஓர் இந்தியாவை உருவாக்குவோம்! ” என்று அழகாக வண்ண மைய்யில் கைப்பட எழுதப்பட்டிருந்தது. மாணவர்களுக்கே உரிய இந்த புதுமையான உத்தி சுதந்திரதினத்தை ஆழமாக நெஞ்சில் பதித்துவிட்டது. வீடு வீடாக தேசியக்கொடியோடு சென்று இந்த வண்ணக் காகிதத்தை கொடுத்தது உண்மையிலேயே மக்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கும். நினைக்க நினைக்க இன்பமாக இருந்தது. சுதந்திரம் குறித்த சிந்தனையை என்னுள்ளும் எழுச்சிபெற வைத்துவிட்டது.

அப்பொழுதுதான் அன்றைய செய்தித்தாள் என் வீட்டில் வந்து விழுந்தது. எடுத்து பார்த்த போது, சுதந்திரம் குறித்த நேருவின் சிந்தனையை இந்திய அரசு விளம்பரமாக வெளியிட்டிருந்தது. “ நமது தலைமுறையின் மிகச் சிறந்த மனிதர்கள் கொண்டிருந்த லட்சியம் ஒவ்வொரு கண்ணிலும் வழிகிற கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்பதுதான். அது நமக்கு எட்டாத லட்சியமாக இருக்கலாம்.ஆனால் கண்ணீர் என்பது இருக்கும் வரையிலும், துன்பம் என்பது இருக்கும் வரையிலும் நமது பணி ஓயப்போவதில்லை” ஜவகர்லால் நேருவின் இந்த சிந்தனையும் மாணவர்களின் சிந்தனையும் ஒரே நேர்க்கோட்டில் இணைவதாக உணர்ந்தேன். மாணவர்களின் இந்த செயலூக்கம் மிக முக்கியமானதாக எனக்கு பட்டது.

“விழாவிற்கு வாருங்கள்!” என்ற செல்பேசியின் அழைப்பு என் சிந்தனையைக் கலைத்தது. உடனே தயாராகி விழா மேடையை நோக்கி சென்றேன். “கொடியது! கொடியது! இளமையில் வறுமை! கொடியது! கொடியது!” என்ற அவ்வை பாட்டியின் வரிகள் ஒளி அச்சாக மேடை அருகே தொங்கிக்கொண்டிருந்தது. பசியின் கொடுமை மீண்டும் வந்து தாக்குமோ என்ற அச்சம் எந்த மனிதருக்கும் வந்துவிடக்கூடாது என்ற வள்ளூவரின் வரிகள் அவரின் படத்தோடு மறுபக்கத்தில் மாட்டப்பட்டிருந்தது. மேடையை நெருங்க நெருங்க உற்சாகம் கூடிக்கொண்டேயிருந்தது.

அப்போதுதான் தேசியக்கொடியோடு இன்னொரு மாணவர்கள் குழு தூரத்தில் வருவதை கவனித்தேன். ஒரு தள்ளுவண்டியில் நிறைய புத்தகங்களை அடுக்கி, தெரு வழியாக விற்றுக்கொண்டு வருவதைப் பார்க்க முடிந்தது. புத்தகங்களை மக்கள் ஆர்வமாக வந்து தொட்டுப் பார்ப்பதும் வாங்குவதுமாக இருந்தனர். எனக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை. மாணவர்களின் இந்த செயலூக்கம் என்னை திக்கு முக்காட வைத்துவிட்டது. தொலைக்காட்சிகளின் ஓயாத விளம்பர ஓசைக்கிடையில் அமைதியாக ஓர் புத்தகம் படிப்பதன் பயன் சொல்லி மாளாது, என்ற சிந்தனை பட்டென் பூக்க மெல்ல மாணவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டேன். நானும் ஒரு புத்தகம் வாங்கி, மாணவர்களை மனதார பாராட்டி மகிழ்ந்தேன். என்னால் அத்துடன் நிற்க முடியவில்லை. மாணவர்களின் இந்த புனிதமான செயல்பாடு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணம் சட்டென தோன்றியது.

அப்பொழுதுதான், என்னை மேடைக்கு வந்து தலைமையேற்று தேசியக்கொடியை ஏற்றுமாறு விழாக்குழுவினர் ஒலிபெருக்கியில் அழைத்துக்கொண்டிருந்தார்கள். அதற்குள் நானும் மாணவர்களோடு மேடைக்கு அருகில் வந்துவிட்டோம். நான் மட்டும் மேடையில் ஏறி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தால் மட்டும் போதாது என்று உணர்ந்தேன். உடனே அனைத்து மாணவர்களையும் மேடைக்கு வரும்படி அழைத்தேன்.

விடுதலைக்காக போராடியவர்களின் லட்சியங்கள் உண்மையில் ஈடேறி உள்ளனவா என்பதை அனுபவப்பூர்வமாக மாணவர்கள் மதிப்பிட வேண்டும். அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் எதிர்காலத்திற்கான இலக்குகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்றுநான் பேசியபோது மாணவர்கள் கைதட்டி வரவேற்றார்கள். மேலும் “ இந்த சுதந்திரதின விழாவை புத்தகவிற்பனையோடு புதிய முறையில் கொண்டாடியது மிக முக்கியமான திருப்புமுனை என்பதை உணர்ந்து தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்” என்று பாராட்டி பேசினேன். அதற்கு மேல், என்னால் மட்டும் இந்த தேசியக்கொடி ஏற்றப்படுவதை என் மனம் விரும்பவில்லை. உடனே அனைத்து மாணவர்களோடும், ஊர் பெரியவர்களோடும் சேர்ந்து தேசியக்கொடியை ஒன்றாக இணைந்து ஏற்றினோம். கைதட்டல் ஓசை ஊரெங்கும் ஒலித்தது. அப்பொழுதுதான் என் மனம் லேசாகி அமைதி அடைந்தது. எதிர்காலம் நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு விழாமுடிந்து வீடு திரும்பினேன்.

Comments

  1. உங்க இந்த அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கிறது அய்யா.
    பகிர்வுக்கு நன்றி.
    வாழ்க விடுதலை.

    ReplyDelete
  2. புதுச்சேரி அன்பழகன்August 23, 2010 at 12:58 AM

    கருணாகரனுக்கு நன்றி ! நமது அனுபவங்கள் மிக முக்கியமானவை .சேர்ந்தே சிந்திப்போம் வாருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

உலகத்தைப் படைத்தது யாரு?

நா ளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள். அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள். “சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! அழகாக படைத்தது யாரு! அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடிகிட்டு அழகாக படைத்தது ...