முன்னுரை த.வி.வெங்கடேஸ்வரன் அறிவுத் தேடல் பயண நூல் " உலகிலேயே பெரிய எண் எது ?” நமக்கு சளி இரும்மல் போன்ற தொற்றுநோய் ஏற்படுவது போல " உலோகங்களுக்கு தோற்றுநோய் பிடிக்குமா ?” என நாம் யோசிக்காத கோணங்களில் மாணவ மாணவியர் கேள்விகளை கேட்டுவிட " சும்மா இரு நீ என்ன ஐன்ஸ்டீன் என்ற நினைப்பா " என்று அவர்கள் வாயை மூடாமல் , அந்த சமயதில் தனக்கு இந்த கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்றாலும் தேடி கண்டுபிடிக்கும் தனது அறிவு தேடலை தான் இந்த நூலில் பதிந்துள்ளார் ஆசிரியர் ச . அன்பழகன் . வெளிநாடுகளுக்கும் சுற்றுலா தளங்களுக்கும் சென்று பயண நூல் எழுதுவார்கள் . இந்த நூல் அறிவுத் தேடல் பயண நூல் . தனக்கு விடைதெரியாத கேள்வியை ஒரு வகுப்பில் மாணவி ஒருவர் ...