அன்று நிறைய வாழைப்பழங்கள் வாங்கி வந்திருந்தார் அப்பா . அதில் ஒரு வாழைப்பழத்தை எடுத்து உண்ண ஆரம்பித்தேன் . அதற்குள் எனது
அம்மா வந்துவிட்டார் .வாழைப்பழங்களைப் பார்த்தயுடன், “அய்யோ இந்த வாழைப்பழங்கள் நன்றாக பழுத்திருக்கிறதே!
நாளைக்கு வைத்தால் அழுகிவிடும்” எனக்கூறி ,வாழைப்பழங்களை சிறிது சிறிதாக நறுக்க சொன்னாள்.
உடனே நான் வாழைப்பழத்தை எடுத்து
நறுக்க ஆரம்பித்தேன் .அப்போதுதான் நான் கவனித்தேன், வாழைப்பழத்தின் நடுவில் கரும்புள்ளிகள்
இருப்பதை. ஏன் நடுவில் கரும்புள்ளிகள் இருக்கின்றன
என அம்மாவிடம் கேட்டேன்
.மூன்றாம் வகுப்பு படிக்கின்ற உனக்கு இந்த ஆராட்சியெல்லாம் எதுக்கு? என கேட்டபடியே, நறுக்கிய வாழைப்பழ துண்டுகளின் தோலை நீக்கி பிசைய சொன்னாள். பின்னர் வெல்லமும் தேங்காய் துருவலும் போட்டு நன்றாக குழையும்படி கிண்டினாள். அப்புறம்
காய்ந்த திராட்சை , கல்கண்டுகளை மேலும் போட்டு கலந்து உண்ணும்படி சொன்னாள். இது பஞ்சமிருதம் போல இருக்கே
என்று சொல்லி சாப்பிட்டேன் .நெஞ்சிவரை இனித்தது .
மறுநாள் எனது அப்பா மார்கெட்டுக்கு
அழைத்து சென்றிந்தார் .அங்கே பழங்கள் விற்கின்ற கடை வழியே
சென்றோம் .நிறைய பேரிச்சம் பழ கொட்டைகள்
வழியில் கொட்டப்பட்டிருந்தன .இவ்வளவு கொட்டைகளா? எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது .அதற்கு பக்கத்து கடையில்தான் பேரீச்சம்பழத்தைக் கீறி கொட்டைகளை வெளியே எடுத்து போட்டபடியே
இருந்தனர் .ஏன் கொட்டைகளை எடுக்கிறார்கள் ?என்று அப்பாவிடம் கேட்டேன் .கொட்டைகளை நீக்கி வெறும் பழத்தை மட்டும் பேக் செய்து விற்பதற்காக என்றார் .
அது
சரிப்பா எல்லா பழத்திற்கும் கொட்டை இருக்குமா ? என்று கேட்டேன் .வந்த வேலையை
முதலில் பார்ப்போம் .உனக்கு பதில் சொல்ல நேரமில்லை ,என் கூறி என்னை இழுத்துக் கொண்டு
போனார் .பழங்கள் , காய்கறிகள் வாங்கிய பிறகு வீடு திரும்பினோம் .
அன்று
இரவு வீட்டுப்படங்கள் முடித்து அம்மா பக்கத்தில் படுத்துக் கொண்டேன் .வாழைப்பழத்தின்
கரும்புள்ளிகள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர சற்று நேரத்தில் தூங்கிவிட்டேன் .
ஒரு பெரிய வாழைத்தோப்பு ஓடிக்கொண்டேயிருக்கிறேன் நான் .வழியில்
ஒரு வாழைமரம் வாழைப்பழ குலை தாங்காமல் ஒடிந்து விழுந்துகிடந்தது .அந்த வாழை மரமோ அளவில் பெரிதாக இருந்தது .வாழைப்பழங்களும் பெரிது பெரிதாக இருந்தன . நன்றாக பழுத்து இருந்ததால் வாசனை ஆளைத் தூக்கியது .உடனே வேகமாக ஒரு வாழைப்பழத்தை எடுத்து கடித்தேன் .அவ்வளவுதான் பல்லு உடைந்து விடும்போல இருந்தது . தாங்க முடியாதவலி. பழத்தை நசுக்கிப்
பார்த்தால் உள்ளே
பேரீட்சசைபழக்
கோட்டையைப் போல கொட்டைகள் இருந்தன . இன்னொரு பழத்தை எடுத்து பார்த்தேன் .அதிலும் கொட்டைகள் இருந்தன .எனக்கோ ஆச்சர்யம்
தாங்க வில்லை , கொட்டைகளை எடுத்து நிறைய
வைத்துக் கொண்டேன் .
வாழைப்பழத்தோப்புல யாருடா திருட்டுப்பையன் ! அவனை பிடிடா! என்று யாரோ ஒருவர் ஓங்கி குரல் கொடுத்தபடியே என்னை விரட்டினார். நான் அம்மா என்று கத்த ஆரம்பித்தேன் .
சற்றே விழிப்பு வர எழுந்து உட்கார்ந்து கொண்டேன் .அம்மாவும் அப்பாவும் நன்றாக துங்கிக்கொண்டிருந்தனர். நான் கண்டது கனவுதான் என்றாலும் ஒரே படபடப்பாக இருந்தது .எழுந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டேன்
.
மறுநாள்
காலை பள்ளிக்கு சென்றதும் எனது அறிவியல் ஆசிரியரைத் தேடினேன் .அவரோ என்னை பார்த்துவிட்டார்
.உற்சாகமாக என்னை வா என்றுஎன்று அழைத்து அமரும்படி சொன்னார் . சார் ! எனக்கு ஒரு சந்தேகம்.
வாழைப்பழத்திற்கு ஏன் சார் விதையில்லை? என்று கேட்டேன் ஏன் இந்த சந்தேகம் என்றார்
.நான் நடந்ததையெல்லாம் ஒன்று விடாமல் மெதுவாக
சொன்னேன் .
அவரோ
அமைதியாக கேட்டபடியே ,யோசிக்க ஆரம்பித்துவிட்டார் .ஆம் உனது கேள்வி நியாயமானதுதான்
.இப்படி யாரும் என்னை கேள்வி கேட்டதில்லை .உனது சிந்தனைக்கு முதலில் எனது வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் .எனக்கோ சந்தோஷமாக இருந்தது .
ஒரு காலத்தில் காட்டு வாழை மரத்தின் பழங்களில் விதைகள் இருந்தது
உண்மைதான் என்றார் . தற்போது நீ விதையில்லாத
திராட்சை பழத்தை பார்த்திருக்கிறாய் அல்லவா?. இது அறிவியலாளர்கள் உருவாக்கியது . ஆனால் வாழைமரத்தை பொறுத்தவரை, காலப்போக்கில்
தற்செயலாக நடந்த மாற்றத்தால் விதையில்லா வாழைமரம் உருவாகியது
என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். காட்டுவாழை
விதையில்லா வீட்டு வாழையாக இன்று நமக்கு உதவுகிறது. என்று
ஆசிரியர் அன்பாக எடுத்து கூறி என்னை தெளிவுபடுத்தினார் . அவருக்கு நன்றி சொல்லி வகுப்பிற்கு
புறப்பட்டேன் . எனக்கே என்மீது பெருமையாக இருந்தது .அலைமோதிய மனதும் அமைதியானது .
Comments
Post a Comment