Skip to main content

வாழைப்பழக் கனவு

ன்று நிறைய வாழைப்பழங்கள் வாங்கி வந்திருந்தார் அப்பா . அதில் ஒரு வாழைப்பழத்தை எடுத்து உண்ண ஆரம்பித்தேன் . அதற்குள் எனது  அம்மா வந்துவிட்டார் .வாழைப்பழங்களைப் பார்த்தயுடன், “அய்யோ இந்த வாழைப்பழங்கள் நன்றாக பழுத்திருக்கிறதே!  நாளைக்கு வைத்தால் அழுகிவிடும்”   எனக்கூறி ,வாழைப்பழங்களை சிறிது சிறிதாக நறுக்க சொன்னாள்.
உடனே நான் வாழைப்பழத்தை எடுத்து  நறுக்க ஆரம்பித்தேன் .அப்போதுதான் நான் கவனித்தேன், வாழைப்பழத்தின் நடுவில் கரும்புள்ளிகள்  இருப்பதை. ஏன் நடுவில் கரும்புள்ளிகள் இருக்கின்றன  என அம்மாவிடம் கேட்டேன்  .மூன்றாம் வகுப்பு படிக்கின்ற உனக்கு இந்த ஆராட்சியெல்லாம் எதுக்கு? என கேட்டபடியே, நறுக்கிய வாழைப்பழ துண்டுகளின் தோலை நீக்கி பிசைய சொன்னாள். பின்னர் வெல்லமும் தேங்காய் துருவலும் போட்டு நன்றாக குழையும்படி கிண்டினாள். அப்புறம்  காய்ந்த திராட்சை , கல்கண்டுகளை மேலும் போட்டு கலந்து உண்ணும்படி சொன்னாள். இது பஞ்சமிருதம் போல இருக்கே  என்று சொல்லி சாப்பிட்டேன் .நெஞ்சிவரை இனித்தது .
மறுநாள் எனது அப்பா மார்கெட்டுக்கு  அழைத்து சென்றிந்தார் .அங்கே பழங்கள் விற்கின்ற கடை வழியே  சென்றோம் .நிறைய பேரிச்சம் பழ கொட்டைகள்  வழியில் கொட்டப்பட்டிருந்தன .இவ்வளவு கொட்டைகளா? எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது .அதற்கு பக்கத்து கடையில்தான் பேரீச்சம்பழத்தைக் கீறி கொட்டைகளை வெளியே எடுத்து போட்டபடியே  இருந்தனர் .ஏன் கொட்டைகளை எடுக்கிறார்கள் ?என்று அப்பாவிடம் கேட்டேன் .கொட்டைகளை நீக்கி வெறும் பழத்தை மட்டும் பேக் செய்து விற்பதற்காக என்றார் . அது சரிப்பா எல்லா பழத்திற்கும் கொட்டை இருக்குமா ? என்று கேட்டேன் .வந்த வேலையை முதலில் பார்ப்போம் .உனக்கு பதில் சொல்ல நேரமில்லை ,என் கூறி என்னை இழுத்துக் கொண்டு போனார் .பழங்கள் , காய்கறிகள் வாங்கிய பிறகு வீடு திரும்பினோம் .
அன்று இரவு வீட்டுப்படங்கள் முடித்து அம்மா பக்கத்தில் படுத்துக் கொண்டேன் .வாழைப்பழத்தின் கரும்புள்ளிகள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர சற்று நேரத்தில் தூங்கிவிட்டேன் .
ஒரு பெரிய வாழைத்தோப்பு ஓடிக்கொண்டேயிருக்கிறேன் நான் .வழியில்  ஒரு வாழைமரம் வாழைப்பழ குலை தாங்காமல் ஒடிந்து விழுந்துகிடந்தது .அந்த வாழை மரமோ அளவில் பெரிதாக இருந்தது .வாழைப்பழங்களும் பெரிது பெரிதாக இருந்தன . நன்றாக பழுத்து இருந்ததால் வாசனை ஆளைத் தூக்கியது .உடனே வேகமாக ஒரு வாழைப்பழத்தை எடுத்து கடித்தேன் .அவ்வளவுதான் பல்லு உடைந்து விடும்போல இருந்தது . தாங்க முடியாதவலி. பழத்தை நசுக்கிப்  பார்த்தால் உள்ளே  பேரீட்சசைபழக்  கோட்டையைப் போல கொட்டைகள் இருந்தன . இன்னொரு பழத்தை எடுத்து பார்த்தேன் .அதிலும் கொட்டைகள் இருந்தன .எனக்கோ ஆச்சர்யம்  தாங்க வில்லை , கொட்டைகளை எடுத்து நிறைய  வைத்துக் கொண்டேன் .
வாழைப்பழத்தோப்புல யாருடா திருட்டுப்பையன் ! அவனை பிடிடா! என்று யாரோ ஒருவர் ஓங்கி குரல் கொடுத்தபடியே என்னை விரட்டினார். நான் அம்மா என்று கத்த ஆரம்பித்தேன் .
சற்றே விழிப்பு வர எழுந்து உட்கார்ந்து கொண்டேன் .அம்மாவும் அப்பாவும் நன்றாக துங்கிக்கொண்டிருந்தனர். நான் கண்டது கனவுதான் என்றாலும் ஒரே படபடப்பாக இருந்தது .எழுந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டேன் .
மறுநாள் காலை பள்ளிக்கு சென்றதும் எனது அறிவியல் ஆசிரியரைத் தேடினேன் .அவரோ என்னை பார்த்துவிட்டார் .உற்சாகமாக என்னை வா என்றுஎன்று அழைத்து அமரும்படி சொன்னார் . சார் ! எனக்கு ஒரு சந்தேகம். வாழைப்பழத்திற்கு ஏன் சார் விதையில்லை? என்று கேட்டேன் ஏன் இந்த சந்தேகம் என்றார் .நான் நடந்ததையெல்லாம்  ஒன்று விடாமல் மெதுவாக சொன்னேன் .
அவரோ அமைதியாக கேட்டபடியே ,யோசிக்க ஆரம்பித்துவிட்டார் .ஆம் உனது கேள்வி நியாயமானதுதான் .இப்படி யாரும் என்னை கேள்வி கேட்டதில்லை .உனது சிந்தனைக்கு முதலில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் .எனக்கோ சந்தோஷமாக இருந்தது .

ஒரு காலத்தில்  காட்டு வாழை மரத்தின் பழங்களில் விதைகள் இருந்தது உண்மைதான்  என்றார் . தற்போது நீ விதையில்லாத திராட்சை பழத்தை பார்த்திருக்கிறாய் அல்லவா?. இது அறிவியலாளர்கள் உருவாக்கியது . ஆனால்  வாழைமரத்தை பொறுத்தவரை, காலப்போக்கில் தற்செயலாக   நடந்த மாற்றத்தால் விதையில்லா வாழைமரம் உருவாகியது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். காட்டுவாழை  விதையில்லா வீட்டு வாழையாக இன்று நமக்கு உதவுகிறது. என்று ஆசிரியர் அன்பாக எடுத்து கூறி என்னை தெளிவுபடுத்தினார் . அவருக்கு நன்றி சொல்லி வகுப்பிற்கு புறப்பட்டேன் . எனக்கே என்மீது பெருமையாக இருந்தது .அலைமோதிய மனதும் அமைதியானது .

Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது....

மாணவர்கள் கொண்டாடிய சுதந்திர தினவிழா

சு தந்திரதின விழாவில் கொடியேற்றி துவக்கி வைப்பதற்காக, மாணவர் நல சங்கம் சார்பில் என்னை அழைத்திருந்தார்கள். முப்பதாண்டுகாலமாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவன் என்ற தகுதி ஒரு காரணமாக இருக்கலாம். மிக முக்கியமான இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக என்னை தயார் செய்துகொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்படும் ஓசைகேட்டு திறந்தேன். கையில் தேசியக்கொடியோடு மாணவர்கள் சீருடையில் வந்திருந்தனர். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. வாங்க! வாங்க! என்று பரவசத்தோடு உள்ளே அழைத்தேன். அனைவரும் ஒரே குரலில் “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! கொண்டாடுவோம்! என்றபடியே ஒரு வண்ண காகிதத்தை கையில் கொடுத்துவிட்டு அடுத்த வீட்டிற்கு சென்றுவிட்டனர். சுதந்திரமே மாணவர் உருவில் வீட்டு வந்தது போல இருந்தது. அவர்கள் கொடுத்துச்சென்ற காகிதத்தின் இரு பக்கத்திலும் பதினைந்து என்று எண்ணால் எழுதப்பட்டிருந்தது. மெல்ல பிரித்து பார்க்க அது எட்டாக மடிக்கப்பட்டிருந்தது. இது சுதந்திரதினத்தை குறிக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. காகிதத்தின் உள்ளே “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! வறுமையற்ற வளமான ஓர் இந்தியாவை உருவாக்குவோம்! ” எ...