உயிரின் அடுக்கு
மலைகளை பாராய்!
மலைகளை பாராய்!
மவுனமாய் அமர்ந்திருக்கும் மலைகளை
பாராய்!
மேடு பள்ளங்களைக் காட்டி நிற்கும்
காட்டையே தன்மேல் வளர்த்திருக்கும்!
நீளமாய் உயரமாய்
வளர்ந்திருக்கும்
வளமான சுனைநீரை வைத்திருக்கும்!
வளைந்து நெளிந்து
சுற்றி
வரும்
வகைவகையாய் உயிர்களை
வளர்த்து வரும்!
புவிமேல்
ஓவியமாய் படர்ந்திருக்கும்
பறவைகள் வாழ்ந்திடவே இடம் கொடுக்கும்!
மலைகள் வெறுமனே பாறைகள்
அல்ல
பல்லுயிர் குடும்பத்தின் அடுக்கு வீடாகும்!
Comments
Post a Comment