Skip to main content

கிரிக்கெட் சூதாட்டம்

பார்த்தும் பேசியும்

பரவசப்பட்டுப்போன

எங்கள் நெஞ்சில் வலி!


நெறிகெட்டுப்போன உங்களால்

நெஞ்சில் வலி

நெறிகட்டிக்கொண்டிருக்கிறது!


தாய்நாட்டிற்காக ஆடச்சொன்னால்

இப்படி ,

தரகுக்கு ஆடிவிட்டீர்களே!


நீங்கள் பேட்ஸ்மேன்களா?

அல்லது

பகடைக்காய்களா?


விக்கெட்டுக்களை வீழ்த்திய நீங்கள்

உங்களை நீங்களே

வீழ்த்திக்கொண்டது

விசித்திரம்தான்!


எல்லாவற்றையும் மாட்டிக்கொண்டு

களத்தில் இறங்கிய நீஙகள்

இதயத்தை மட்டும்

எங்கே கழற்றி வைத்தீர்கள்!


நீங்கள் பெவிலியனுக்கு

திரும்பும் போதெல்லாம்

நாங்கள் வருத்தப்படுவோம்

ஆனால், நீங்கள்

மகிழ்ந்திருப்பீர்கள் என்று

இப்போதுதான் தெரிகிறது!


உங்கள் ரன்களை

வாசித்தறிந்த ரசிகர்கள்

உங்கள் , ரணங்களை

வாசிக்கிறார்கள்!

உங்கள் விக்கெட்டுக்களை

வாசித்தறிந்த ரசிகர்கள்

உங்களை நீங்களே

விற்றுக்கொண்டதை வாசிக்கிறார்கள்!


கடைசி ஓவரில் இதயம் துடிதுடிக்க

நீங்கள் ஆடினீர்களோ என்னவோ

நாங்கள் இதயம் துடிதுடிக்கத்தான்

பார்த்துக்கொண்டிருந்தோம்!


ஆனால் , ரசிகர்கள் சிலர்

கடைசி ஓவரின் கடைசி பந்தில்

தங்கள் இதயதுடிப்பையே

நிறுத்திக்கொண்டார்களே!

அவர்களின் ஆத்மாவிற்கு

என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்!


தேசத்தின் வந்தேமாதரப்பாடல்களில்

வந்து போவது

உங்கள் முகமா? அல்லது

முகமூடியா?


முகமூடிகள் ஆட்சிசெய்யும் தேசத்தில்

இன்னும் எத்தனை முகமூடிகள்

வந்து விழுமோ

யார் அறிவார்?


நீங்கள் ஆடியதும் ஓடியதும்

நாட்டுக்கா?

இல்லை உங்கள் வீட்டுக்கா?


வீழாதிருப்பவன்தான் வீரன்

இப்படி வீழ்ந்து கிடக்கீறீர்களே

ஞாயமா?


எம் ரசிகர்கள் கிரிக்கெட்டை

கை கழுவ தயாராயில்லை

உங்கள் மனங்களை கழுவவே

துடிக்கீறார்கள்!


கிரிக்கெட்டில்

விக்கெட்டுகள் வீழும்

கிரிக்கெட்டே வீழ்ந்து போகுமா?


அம்மாவின் முந்தானைக்காசைத்

திருடியாவது, எம் ரசிகர்கள்

கிரிக்கெட் ஆடிக்கொண்டுதான் இருப்பார்கள்!

ஆனால் எம் ரசிகர்கள்

ஆடும் ஆட்டம் நிஜமானது

நீங்கள் எப்போது நிஜமான

ஆட்டத்தை ஆடப்போகிறீர்கள்!


Comments

  1. புதுச்சேரி அன்பழகன்February 14, 2011 at 8:39 PM

    உங்களின் சரியான விமர்சனத்திற்கு நன்றி !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ்

  இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ் ---- புதுச்சேரி அன்பழகன்.          " டாக்டர் யெல்லபிரகட சுப்பாராவ்   என்ற இந்திய விஞ்ஞானி வாழ்ந்ததால் இன்று உலக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அவரைப்பற்றி நன்கு அறிந்த அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். மருத்துவ உலகிற்கு பல கண்டுபிடிப்புகளையும் பல முன்னெடுப்புகளையும் வழங்கிய அதிசய மனிதர் என்றும் அவர் போற்றப்படுகிறார்.. ஆனாலும் அவரைப்பற்றி   அதிகமாக நாம் கேள்விப்பட்டிருக்க   வாய்ப்பில்லை.         ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரம் என்ற ஊரில் ஒரு ஏழை தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் 1895-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள்   யெல்லபிரகட சுப்பாராவ்   பிறந்தார். தற்போதைய கோவிட்-19 தொற்று போல அன்றைக்கு பிளேக் என்ற தொற்று நோய் பரவியதால் இவரின் தந்தை காலமானார். தன் தந்தையின் இழப்பை சுப்பாராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார்.     தந்தையின் வருமானம் இல்லாமல் குடும்பம் தவித்...

ஒரு எளிய கேள்வி

து வைத்த துணிகளைக் காயவைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் என் மகள் என்னருகே ஓடி வந்தாள். கேள்வி கேட்பது அவள் சுவாபம். நான் தடை ஏதும் செய்வதில்லை.அதிலும் அவள் கேள்வி எப்படிப்பட்டதாக இருந்தாலும்,அது எனது சிந்தனையை தூண்டுவதாகவே இருந்துள்ளது. அவளது கேள்வியை உள்வாங்க நானும் ஆவலாக , ஒடிவந்த என் மகளை அப்படியே தூக்கிக்கொண்டேன். அப்பா! அப்பா! எனக்கு ஒரு சந்தேகம். என்னமா ,சொல்லு! சொல்லூ! என்றேன் ஆவலோடு. அப்பா! அப்பா! துணிகளெல்லாம் எப்படி அப்பா! காயுது? அத, நம்ம கண்ணால பார்க்க முடியலையே ஏனப்பா? என்றாள். “ஓ அதுவாமா, துணிகளெல்லம் சூரிய வெப்பத்தால காயுது.அதிலிருக்கிற ஈரமெல்லாம் காற்றுல காணாம போயிடுது. அதனால நம்மால பார்க்க முடிவதில்லை” என்றேன். அத நம்ம கண்ணால பார்க்க வேற வழி இல்லையாப்பா?என்று இன்னொரு கேள்வியை கேட்டுவிட்டாள். என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. சரி! சரி! அப்புறமா சொல்கிறேன்! என்று அவளை சமாளித்து அனுப்பி விட்டேன். என் மகளின் இந்த கேள்வி அறிவியல் ஆசிரியரான என்னை குடைந்து கொண்டேயிருந்தது. ஆவியாகி காற்றில் கலந்துவிடுகிற நீரை , கண் முன்னால் காட்டினால்தான் பிள்ளைகள் நம்முவார்...