Skip to main content

கிரிக்கெட் சூதாட்டம்

பார்த்தும் பேசியும்

பரவசப்பட்டுப்போன

எங்கள் நெஞ்சில் வலி!


நெறிகெட்டுப்போன உங்களால்

நெஞ்சில் வலி

நெறிகட்டிக்கொண்டிருக்கிறது!


தாய்நாட்டிற்காக ஆடச்சொன்னால்

இப்படி ,

தரகுக்கு ஆடிவிட்டீர்களே!


நீங்கள் பேட்ஸ்மேன்களா?

அல்லது

பகடைக்காய்களா?


விக்கெட்டுக்களை வீழ்த்திய நீங்கள்

உங்களை நீங்களே

வீழ்த்திக்கொண்டது

விசித்திரம்தான்!


எல்லாவற்றையும் மாட்டிக்கொண்டு

களத்தில் இறங்கிய நீஙகள்

இதயத்தை மட்டும்

எங்கே கழற்றி வைத்தீர்கள்!


நீங்கள் பெவிலியனுக்கு

திரும்பும் போதெல்லாம்

நாங்கள் வருத்தப்படுவோம்

ஆனால், நீங்கள்

மகிழ்ந்திருப்பீர்கள் என்று

இப்போதுதான் தெரிகிறது!


உங்கள் ரன்களை

வாசித்தறிந்த ரசிகர்கள்

உங்கள் , ரணங்களை

வாசிக்கிறார்கள்!

உங்கள் விக்கெட்டுக்களை

வாசித்தறிந்த ரசிகர்கள்

உங்களை நீங்களே

விற்றுக்கொண்டதை வாசிக்கிறார்கள்!


கடைசி ஓவரில் இதயம் துடிதுடிக்க

நீங்கள் ஆடினீர்களோ என்னவோ

நாங்கள் இதயம் துடிதுடிக்கத்தான்

பார்த்துக்கொண்டிருந்தோம்!


ஆனால் , ரசிகர்கள் சிலர்

கடைசி ஓவரின் கடைசி பந்தில்

தங்கள் இதயதுடிப்பையே

நிறுத்திக்கொண்டார்களே!

அவர்களின் ஆத்மாவிற்கு

என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்!


தேசத்தின் வந்தேமாதரப்பாடல்களில்

வந்து போவது

உங்கள் முகமா? அல்லது

முகமூடியா?


முகமூடிகள் ஆட்சிசெய்யும் தேசத்தில்

இன்னும் எத்தனை முகமூடிகள்

வந்து விழுமோ

யார் அறிவார்?


நீங்கள் ஆடியதும் ஓடியதும்

நாட்டுக்கா?

இல்லை உங்கள் வீட்டுக்கா?


வீழாதிருப்பவன்தான் வீரன்

இப்படி வீழ்ந்து கிடக்கீறீர்களே

ஞாயமா?


எம் ரசிகர்கள் கிரிக்கெட்டை

கை கழுவ தயாராயில்லை

உங்கள் மனங்களை கழுவவே

துடிக்கீறார்கள்!


கிரிக்கெட்டில்

விக்கெட்டுகள் வீழும்

கிரிக்கெட்டே வீழ்ந்து போகுமா?


அம்மாவின் முந்தானைக்காசைத்

திருடியாவது, எம் ரசிகர்கள்

கிரிக்கெட் ஆடிக்கொண்டுதான் இருப்பார்கள்!

ஆனால் எம் ரசிகர்கள்

ஆடும் ஆட்டம் நிஜமானது

நீங்கள் எப்போது நிஜமான

ஆட்டத்தை ஆடப்போகிறீர்கள்!


Comments

  1. புதுச்சேரி அன்பழகன்February 14, 2011 at 8:39 PM

    உங்களின் சரியான விமர்சனத்திற்கு நன்றி !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை

மாணவர்கள் கொண்டாடிய அறிவியல் விழா!

             காலை இறைவணக்கத்தை முறைப்படி செலுத்துவதற்காக மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் வரிசையாக நிற்கத் தொடங்கினார்கள். ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களை ஒழுங்கு படித்தியபடியே மேடைக்கு வந்தார்கள். சற்று நேரத்தில் பள்ளியின் முதல்வரும் மேடைக்கு அருகில் வரவும்,, மாணவர்களிடையே சப்தம் படிப்படியாக குறைந்து அமைதி நிலவியது. மாணவத் தலைவர் இறைவணக்கத்தை ஆரம்பித்து வைக்க, மாணவர்கள் ஒரே குரலில் பாடி முடித்தார்கள். சில முக்கியச் செய்திகள் மற்றும் அறிவிப்புகளோடு அன்றைய இறைவணக்க நிகழ்வு முடிவுக்கு வந்தது. மாணவர்கள் தத்தம் வகுப்பிற்குச் செல்லத் தொடங்கினார்கள். மைதானம் வெற்றிடமாக மாறியது. சிறிது நேரத்தில் மீண்டும் சில மாணவர்கள் மைதானத்தை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக ஓடினார்கள். பள்ளி முதல்வர் தொடங்கி ஆசிரியர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏன் சில மாணவர்கள் மட்டும் மீண்டும் ஏதோ அணிவகுப்பு நடத்த முயற்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை!. மீண்டும் மைதானத்தில் ஓடிய மாணவர்கள் ஏதோ ஒரு ஒழுங்கிற்கு வந்தது போல தெரிந்தது. குறுக்கும் நெடுக்குமாக ஒரு அட்

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது.