Skip to main content

ஓர் ஆசிரியனாகக் கதை சொல்லும் பொறியாளரை வரவேற்கிறேன்.



       கரும்பலகைக் கதைகள் புத்தகத்திற்கு முன்னுரை

                     -வேலுமாமா,புதுச்சேரி

           திகட்டாத நினைவுகளின் அதிசயப்  பெட்டகம் குழந்தைப் பருவம். நினைக்க  நினைக்கத் தித்திக்கும். இப்பருவத்தின் கற்பனைகளாலேயே இந்த உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது . அதோடு வயதில் முதிர்ந்தவர் என்று உலகில் யாரிருக்கிறார் ? உண்மைதான் .வயதில் முதிர்ந்தவர் என்று தேடினால் யார் நம் முன்னே வருவார்கள். அரிஸ்டாட்டிலா , கலிலீயோவா, , நியூட்டனா, புத்தரா , காந்தியடிகளா  யாரைச் சொல்வது .இன்று உலகின் மிகமிக வயது முதிர்ந்த ஜப்பானிய மூதாட்டி சியாமியாக்கோ(117வயது) கூட ஒரு பச்சிளம் சிறுமியாய்ச் சிரிக்கிறார் .


                உலகின் ஒப்பற்ற மனிதர்களை  நினைத்தாலே அவர்களின் கற்பனையும் ஆற்றலும் நிறைந்த அவர்களின் குழந்தைப் பருவமே முன்னெழுகிறது . அவர்கள் படைத்த அதிசயங்களின் இரகசியங்கள் அவர்கள் குழந்தைகளாய் இருந்த போதே உருவாகியிருக்கின்றன .

குழந்தைப் பருவ அட்டகாச அனுபவங்களை கல்வியோடு இணைத்துவிட்டால் உலகில் எண்ணிலா அதிசயங்கள் தோன்றும் எனும் பெருங்கனவில் திருவாளர் .அன்பழகன் "கரும்பலகைக் கதைகள்" எனும் கல்வியியல் கதைகளை எழுதியிருக்கிறார் .சிறுவர்களுக்கான கலை இலக்கியப்  படைப்புகளைத் தேடும் இந்நாளில் இந்நூல் ஒரு அறிவியல் பரிசு .

'பள்ளிதோறும் ஒரு கோமாளி வேண்டும்' என்று எண்ணும் என்னைப் போன்ற சிறுவர்கள் இக்கதைகளில் வரும் ஆசிரியர் மாணவர் சந்திப்புகளில்  'மகிழ்ச்சி ' எனும் அந்த அருமருந்தின் தேவையை உணரலாம் .

எண்கள் ,எழுத்துக்கள் ,வார்த்தை ,வாக்கியங்கள்  தொடங்கி மொழி ,வரலாறு ,கணிதம், அறிவியல் என கற்றலுக்கும் கற்பனைக்குமான  கதையாடலை எழுத  முற்படுகிறார்   .அன்பழகன் .

மருத்துவ எண் "99’’ - கிளிக்  செய்து உலகின் மிகப் பெரிய எண் "கூகோல்" என ஆரம்பமாகிறது  இக்கதைகள் . பேரீச்சம்பழக்  கொட்டைகளால் கட்டப்பட்ட  கோட்டைக்குள் புரண்டெழுந்து ஒரு தேர்ந்த ஆசிரியனாகப் பயணம்  செய்கிறார் இந்தப் பொறியாள எழுத்தாளர் .

'ரோபர்ட் ஸ்காட் ' என்ற  இராணுவத் தளபதியோடு பூமியின்  தென் துருவ  ஆராய்ச்சிக்குக்  செல்லும் 'அமுன்சென்' எனும் அறிவியலாளர்,  இரும்பையும் தகரத்தையும் துன்புறச் செய்யும்     'டின் பிளேக் 'நோயைக் காண்பது, குக்கிராம வீட்டு  மண்பானைகளில் நிரப்பப்பட்ட  லேசான கருமை படிந்த உப்பின் சுகம்தரும் வேதிவினையை கதையாக விவரிப்பது, சிலந்தி வலை மர்மத்தை அவிழ்ப்பது , சின்னச்சிறுவர் வாழ்வுக்குக் "கால அட்டவணை " தந்த மகாகவி பாரதி முண்டாசைக் கட்டிக் கொண்டு "தராசு" முன் அமர்ந்து  எது சரி? எது தவறு? என ஆராய்ச்சிக் செய்வது என எல்லாமே  சிறந்த பாடக்கதைகளாய் இருக்கின்றன

வாட்டியெடுக்கும் கல்விச்சந்தைகளுக்கு  நடுவே  சின்னச்சிறுவர்களின்  மனஉலகை அழகு படுத்த நினைக்கும் திரு .அன்பழகனின்  கதைகளை குழந்தைகளோடு  படித்தும் சொல்லியும்  பாராட்டலாம் .                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            
  அன்புடன்                                                                                                                                                                                                                                                                                                                     வேலுமாமா   புதுச்சேரி  

Comments

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ்

  இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ் ---- புதுச்சேரி அன்பழகன்.          " டாக்டர் யெல்லபிரகட சுப்பாராவ்   என்ற இந்திய விஞ்ஞானி வாழ்ந்ததால் இன்று உலக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அவரைப்பற்றி நன்கு அறிந்த அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். மருத்துவ உலகிற்கு பல கண்டுபிடிப்புகளையும் பல முன்னெடுப்புகளையும் வழங்கிய அதிசய மனிதர் என்றும் அவர் போற்றப்படுகிறார்.. ஆனாலும் அவரைப்பற்றி   அதிகமாக நாம் கேள்விப்பட்டிருக்க   வாய்ப்பில்லை.         ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரம் என்ற ஊரில் ஒரு ஏழை தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் 1895-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள்   யெல்லபிரகட சுப்பாராவ்   பிறந்தார். தற்போதைய கோவிட்-19 தொற்று போல அன்றைக்கு பிளேக் என்ற தொற்று நோய் பரவியதால் இவரின் தந்தை காலமானார். தன் தந்தையின் இழப்பை சுப்பாராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார்.     தந்தையின் வருமானம் இல்லாமல் குடும்பம் தவித்...

ஒரு எளிய கேள்வி

து வைத்த துணிகளைக் காயவைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் என் மகள் என்னருகே ஓடி வந்தாள். கேள்வி கேட்பது அவள் சுவாபம். நான் தடை ஏதும் செய்வதில்லை.அதிலும் அவள் கேள்வி எப்படிப்பட்டதாக இருந்தாலும்,அது எனது சிந்தனையை தூண்டுவதாகவே இருந்துள்ளது. அவளது கேள்வியை உள்வாங்க நானும் ஆவலாக , ஒடிவந்த என் மகளை அப்படியே தூக்கிக்கொண்டேன். அப்பா! அப்பா! எனக்கு ஒரு சந்தேகம். என்னமா ,சொல்லு! சொல்லூ! என்றேன் ஆவலோடு. அப்பா! அப்பா! துணிகளெல்லாம் எப்படி அப்பா! காயுது? அத, நம்ம கண்ணால பார்க்க முடியலையே ஏனப்பா? என்றாள். “ஓ அதுவாமா, துணிகளெல்லம் சூரிய வெப்பத்தால காயுது.அதிலிருக்கிற ஈரமெல்லாம் காற்றுல காணாம போயிடுது. அதனால நம்மால பார்க்க முடிவதில்லை” என்றேன். அத நம்ம கண்ணால பார்க்க வேற வழி இல்லையாப்பா?என்று இன்னொரு கேள்வியை கேட்டுவிட்டாள். என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. சரி! சரி! அப்புறமா சொல்கிறேன்! என்று அவளை சமாளித்து அனுப்பி விட்டேன். என் மகளின் இந்த கேள்வி அறிவியல் ஆசிரியரான என்னை குடைந்து கொண்டேயிருந்தது. ஆவியாகி காற்றில் கலந்துவிடுகிற நீரை , கண் முன்னால் காட்டினால்தான் பிள்ளைகள் நம்முவார்...