Skip to main content

கிரிக்கெட் சூதாட்டம்

பார்த்தும் பேசியும்

பரவசப்பட்டுப்போன

எங்கள் நெஞ்சில் வலி!


நெறிகெட்டுப்போன உங்களால்

நெஞ்சில் வலி

நெறிகட்டிக்கொண்டிருக்கிறது!


தாய்நாட்டிற்காக ஆடச்சொன்னால்

இப்படி ,

தரகுக்கு ஆடிவிட்டீர்களே!


நீங்கள் பேட்ஸ்மேன்களா?

அல்லது

பகடைக்காய்களா?


விக்கெட்டுக்களை வீழ்த்திய நீங்கள்

உங்களை நீங்களே

வீழ்த்திக்கொண்டது

விசித்திரம்தான்!


எல்லாவற்றையும் மாட்டிக்கொண்டு

களத்தில் இறங்கிய நீஙகள்

இதயத்தை மட்டும்

எங்கே கழற்றி வைத்தீர்கள்!


நீங்கள் பெவிலியனுக்கு

திரும்பும் போதெல்லாம்

நாங்கள் வருத்தப்படுவோம்

ஆனால், நீங்கள்

மகிழ்ந்திருப்பீர்கள் என்று

இப்போதுதான் தெரிகிறது!


உங்கள் ரன்களை

வாசித்தறிந்த ரசிகர்கள்

உங்கள் , ரணங்களை

வாசிக்கிறார்கள்!

உங்கள் விக்கெட்டுக்களை

வாசித்தறிந்த ரசிகர்கள்

உங்களை நீங்களே

விற்றுக்கொண்டதை வாசிக்கிறார்கள்!


கடைசி ஓவரில் இதயம் துடிதுடிக்க

நீங்கள் ஆடினீர்களோ என்னவோ

நாங்கள் இதயம் துடிதுடிக்கத்தான்

பார்த்துக்கொண்டிருந்தோம்!


ஆனால் , ரசிகர்கள் சிலர்

கடைசி ஓவரின் கடைசி பந்தில்

தங்கள் இதயதுடிப்பையே

நிறுத்திக்கொண்டார்களே!

அவர்களின் ஆத்மாவிற்கு

என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்!


தேசத்தின் வந்தேமாதரப்பாடல்களில்

வந்து போவது

உங்கள் முகமா? அல்லது

முகமூடியா?


முகமூடிகள் ஆட்சிசெய்யும் தேசத்தில்

இன்னும் எத்தனை முகமூடிகள்

வந்து விழுமோ

யார் அறிவார்?


நீங்கள் ஆடியதும் ஓடியதும்

நாட்டுக்கா?

இல்லை உங்கள் வீட்டுக்கா?


வீழாதிருப்பவன்தான் வீரன்

இப்படி வீழ்ந்து கிடக்கீறீர்களே

ஞாயமா?


எம் ரசிகர்கள் கிரிக்கெட்டை

கை கழுவ தயாராயில்லை

உங்கள் மனங்களை கழுவவே

துடிக்கீறார்கள்!


கிரிக்கெட்டில்

விக்கெட்டுகள் வீழும்

கிரிக்கெட்டே வீழ்ந்து போகுமா?


அம்மாவின் முந்தானைக்காசைத்

திருடியாவது, எம் ரசிகர்கள்

கிரிக்கெட் ஆடிக்கொண்டுதான் இருப்பார்கள்!

ஆனால் எம் ரசிகர்கள்

ஆடும் ஆட்டம் நிஜமானது

நீங்கள் எப்போது நிஜமான

ஆட்டத்தை ஆடப்போகிறீர்கள்!


Comments

  1. புதுச்சேரி அன்பழகன்February 14, 2011 at 8:39 PM

    உங்களின் சரியான விமர்சனத்திற்கு நன்றி !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அந்த நேரம் பார்த்து தலைமை ஆசிரியர் அவரை அழைப்பதாகச் சொல்ல, மாணவ மாணவியரிடம் ஆளுக்கு

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை

வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு

  வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு இ ராபர்ட்   ஐந்தாம் வகுப்பில் புதியதாக வந்து சேர்ந்திருந்தான் . பார்ப்பதற்கு வெள்ளைக்காரரைப் போல சிவப்பாக இருந்தான் . யார் வகுப்பிற்கு வந்தாலும் அவனையே விசாரித்தார்கள் . வகுப்பறையைத் தாண்டி பள்ளி முழுவதுமே அவனையே   வியப்பாக   பார்த்தார்கள் .   இ ராபர்ட் வந்ததிலிருந்து இ ராமு தன் நிறத்தையே அடிக்கடிப் பார்த்துக்கொண்டான் . கருப்பாகவும் இல்லை . வெள்ளையாகவும் இல்லை . இரண்டு நிறமும் கலந்த மாதிரி இருந்தது . நாம் ஏன் சிகப்பாக பிறக்க வில்லை என்று தனக்குள் கேட்டுக்கொண்டான் . சிவப்பாக இருந்தால் ஏன் இப்படி மதிப்பாக பார்க்கிறார்கள்   என்பதை   ராமுவால் புரிந்துகொள்ள   முடியவில்லை . இ ராமு தன் நண்பர்களிடம் அடிக்கடி இது பற்றி கேட்டான் . அதெல்லாம் ஒன்னுமில்லடா , நம்ம கண்ணுக்குத் தான் அப்படி அழகா தெரியுது ! நீ நல்லா படித்து முதல் ரேங்க் எடுத்தா அப்புறம் உன்னைப்பற்றியே எல்லோரும் பேசுவார்கள் . ராமுவுக்கு இது சரி என்று பட்டாலும் . மனம் மட்டும் கேட்பதாக இல்லை . என்ன செய்வதென்று யோசிக்கத்தொ